ADVERTISEMENT
ADVERTISEMENT
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரையும் வைத்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்த மூத்த இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கு, கடந்த 7ஆம் தேதியன்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்துவந்தார்.
இந்த நிலையில், தற்போது எஸ்.பி.முத்துராமன் கரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அவரது உடல்நிலை சீராக இருப்பதால் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Show comments