Skip to main content

கெத்து, வெத்து வில்லன் சௌந்தர ராஜா...

Published on 29/12/2018 | Edited on 29/12/2018
soundara raja

 

 

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர் சௌந்தர ராஜா வித்தியாசமான நடிகர்களில் ஒருவர். கதைநாயகனாக நடித்துக்கொண்டிருக்கும்போதே வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் நடித்து கொண்டிருக்கிறார். சுந்தரபாண்டியனில் தன் பயணத்தை தொடங்கிய சௌந்தர ராஜா சமீபத்திய தமிழ் ஹிட் படங்களின் மூலம் சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்கிறார். கார்த்தி கதாநாயகனாக நடித்த கடைக்குட்டி சிங்கம், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம், இரண்டு படங்களிலும் குணச்சித்திர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெளியான சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தில் ராஜபாண்டி எம்.எல்.ஏ. வாக கெத்து, வெத்து வில்லன் கதாபாத்திரத்தில் சௌந்தர ராஜா நடித்திருந்தார். இந்நிலையில் இதுகுறித்து அவர் பேசியபோது..."சிங்கங்களை எதிர்த்து நின்று கெத்தாக சீறியதோடு மட்டுமின்றி ரசிகர்களை சிரிக்கவும் வைத்ததில் நிஜமாகவே மகிழ்ச்சி" என்றார். சௌந்தர ராஜா நடிப்பில் அடுத்ததாக, கள்ளன், அருவா சண்ட உள்ளிட்ட படங்கள் விரைவில் வெளியாகவுள்ளன.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நீங்களும் மருத்துவர்கள் அறிவுரையை கேளுங்கள்" - நடிகர் சௌந்தரராஜா வேண்டுகோள்! 

Published on 01/07/2021 | Edited on 01/07/2021

 

vgddvd

 

இந்தியாவில் கடந்த சில வாரங்களாகப் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்திவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்லக் கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் 25,000க்கும் மேல் பதிவாகிவந்த தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து பத்தாயிரத்திற்கும் கீழ் பதிவாகிவருகிறது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். 

 

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் சௌந்தரராஜா கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன், "அரசாங்கத்தின் வழிகாட்டுதலின்படி, என் குடும்ப மருத்துவரின் அறிவுரைப்படி என்னுடைய முதல் கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டேன். நீங்களும் மருத்துவர்கள் அறிவுரைப்படி விரைவில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுங்கள். கரோனாவை ஒழிப்போம்.!!" என பதிவிட்டுள்ளார். இவரின் புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

 

 

Next Story

"இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன்" - நடிகர் சௌந்தர ராஜா கவலை!

Published on 05/05/2021 | Edited on 05/05/2021

 

bgbdfsbsx

 

பல்வேறு பொதுநல வழக்குகள் மூலம் பல விஷயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு கண்ட சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி, வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில வாரங்களுக்கு முன் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு வயது 87. அங்கு சிகிச்சை பெற்றுவந்த டிராஃபிக் ராமசாமியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக நேற்று (04.05.2021) தகவல் வெளியான நிலையில், சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தார். அவரது மறைவுக்கு சமூக ஊடகங்களில் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், நடிகர் சௌந்தர ராஜா மறைந்த டிராஃபிக் ராமசாமிக்கு இரங்கல் ட்வீட் செய்துள்ளார். அதில்...

 

"பல சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த மாமனிதர் ட்ராஃபிக் ராமசாமி ஐயா அவர்கள் இன்று இயற்கை எய்தினார். சமூக நலனுக்காக போராடுவதில் இவர் ஒரு முன் மாதிரி. இவருடன் சேர்ந்து நானும் ஒரு சில போராட்டங்களில் கலந்து இருக்கிறேன். உங்கள் ஆத்மா இறைவனடி சேரட்டும் ஐயா" என கூறியுள்ளார்.