Skip to main content

"மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டது" - பிரித்விராஜ்

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

Sorry. It was a mistake - "kaduva' movie star prithviraj sukumaran

 


ஷாஜி கைலாஸ் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'கடுவா'. ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இப்படத்தில் மாற்றுத்திறனாளி குறித்து, "மாற்றுத்திறனாளி குழந்தைகள் பிறப்பதற்கு அவரவர் பெற்றோர் செய்த பாவம்தான் காரணம்" என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வசனம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அதோடு இயக்குநர் ஷாஜி கைலாஸ், உள்ளிட்ட படக்குழுவினருக்கு கேரள மாற்றுத்திறனாளி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

 

இந்நிலையில் ஷாஜி கைலாஸ் மற்றும் பிரித்விராஜ் ஆகியோர் மாற்றுத்திறனாளி ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் தொடர்பாக மன்னிப்பு கேட்டுள்ளனர். இது குறித்து ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "நான் இயக்கிய கடுவா படத்தில் மாற்றுத்திறனாளிகளின் பெற்றோரை வேதனைப்படுத்தும் வகையில் காட்சி இடம்பெற்றதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். திரைக்கதையில் அந்த வசனம் வரும்போது கதாநாயகன் பிரித்விராஜோ, இயக்கிய நானோ அதன் மற்றொரு பக்கம் பற்றி யோசிக்காமல் செய்துவிட்டோம் என்பதுதான் உண்மை" என்று விரிவாக சில நிகழ்வுகளை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். 

 

ஷாஜி கைலாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையை பிரித்விராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, "மன்னிக்கவும். தவறு நடந்துவிட்டது. ஏற்றுக்கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து படக்குழு, படத்தில் மாற்றுத்திறனாளி குறித்து இடம்பெற்ற வசனங்களை நீக்கக்கோரி சென்சார் போர்டு குழுவிடம் விண்ணப்பிக்க முடிவுசெய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோகன்லால் - பிரித்விராஜ் கூட்டணியின் லூசிஃபர் 2; புது அப்டேட் வெளியீடு

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

lucifer 2 shooting starts update

 

மலையாளத்தில் நடிகர் ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் சிரஞ்சீவி நடிப்பில் 'காட்ஃபாதர்' என்ற தலைப்பில் கடந்த ஆண்டு ரீமேக் செய்து வெளியிடப்பட்டது. 

 

இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகக் கடந்த ஆகஸ்டில் அறிவிப்பு வெளியானது. ஆண்டனி பெரும்பாவூர் இப்படத்தை தயாரிக்க முரளி கோபி கதை எழுதுகிறார். 'எம்புரான்' எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ப்ரித்விராஜ் இயக்குகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். 

 

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கவுள்ளதாகப் படக்குழு தற்போது தெரிவித்துள்ளது. மேலும் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூருடன் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல் முறையாக மலையாளத் திரையுலகில் காலடி வைக்கிறார் தயாரிப்பார் சுபாஸ்கரன். இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. 

 

 


 

Next Story

பிரித்விராஜுக்கு விபத்து - இன்று அறுவை சிகிச்சை

Published on 26/06/2023 | Edited on 26/06/2023

 

prithviraj accident in shooting spot

 

மலையாள நடிகரான பிரித்விராஜ் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும் இந்தியில் அக்‌ஷய் குமார் நடிக்கும் 'படே மியான் சோட் மியான்' (Bade Miyan Chote Miyan) படத்திலும் மலையாளத்தில் 'ஆடு ஜீவிதம்' படத்திலும் நடிக்கிறார். மேலும் விபின் தாஸ் இயக்கத்தில் 'குருவாயூர் அம்பல நடையில்' படத்திலும், இயக்குநராக மோகன்லாலை வைத்து லூசிஃபர் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கவுள்ளார். 

 

இதனிடையே தற்போது மலையாளத்தில் 'விலயாத் புத்தா' என்ற தலைப்பில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் சந்தனக் கடத்தல் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் மரையூரில் கடந்த சில மாதங்களாக நடந்த நிலையில், நேற்று காலை மரையூர் பேருந்து நிலையத்தில் ஒரு பேருந்தில் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அப்போது எதிர்பாராத விதமாக பிரித்விராஜ் கீழே விழுந்துள்ளார். அதில் காலில் அடிபட்டுள்ளது. பின்பு அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பின்பு கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 

 

இதையடுத்து இன்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. அவர்  பூரண குணமடைய வேண்டி அவரது ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.