தமிழில் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் உருவான படம் சிங்கம், அதே பெயரில் பாலிவுட் இயக்குனர் ரோஹிட் ஷெட்டி பிரபல நடிகர் அஜய் தேவ்கனை வைத்து ஹிந்தியில் ரீமேக் செய்தார். இந்த படம் பாலிவுட்டில் ரசிகர்களாலும் வரவேற்கப்பட்டது.

Advertisment

sooryavanshi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அதனை தொடர்ந்து சிங்கம் படத்தின் கதையின் தொடர்ச்சியாக ஒரு கதையை உருவாக்கி சிங்கம் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தை இயக்கி வெளியிட்டார் ரோஹிட். இதுவும் வெற்றியடைய போலீஸ் கதாப்பாத்திரங்கள் இணைந்த ஒரு ஆக்‌ஷன் பட தொடரை இயக்க ரோகித் ஷெட்டி திட்டமிட்டார். அதன் தொடர்ச்சியாக கடந்த வருடம் வெளியானது சிம்பா. இப்படத்தை ரன்வீர் சிங்கை வைத்து எடுத்தார் ரோஹிட் ஷெட்டி. இந்த படத்தின் இறுதியில் அஜய் தேவ்கன், அக்‌ஷய்குமார் ஆகியோர் கெஸ்ட் ரோல் செய்திருப்பார்கள்.

Advertisment

இதன்பின் அக்‌ஷய்குமாரை வைத்து சூர்யவன்ஷி என்ற படத்தை தொடங்கினார் ரோஹிட் ஷெட்டி. இந்த படத்தில் அக்‌ஷய்குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூன்று பேரின் கதாபாத்திரங்களும் இணைவதுபோல சித்தரித்திருக்கிறார் ரோஹிட் ஷெட்டி. இதன் மூலம் ரோஹிட் ஷெட்டி காப் யுனிவர்ஸ் என்று அழைக்கப்பட்டது.

சூர்யவன்ஷி படத்தில் கத்ரினா கைஃப், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். வருகிற மார்ச் 24ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இன்று ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சுமார் நான்கு நிமிடங்கள் நீளம் கொண்ட இந்த ட்ரைலரில் அக்‌ஷய் குமார் பல ஆக்‌ஷன் காட்சிகள் வருகின்றன.