சமூக வலைதளங்களில், அழகானஆச்சர்யமானவிஷயங்கள்,உடனே பலரின்கவனத்தை ஈர்த்துவைரலாகி விடும். அப்படிதான்இப்பொழுது, ஆவி பறக்கும் டீயை வைத்து எடுக்கப்பட்ட, சில நொடி வீடியோஒன்றுவைரலாகி வருகிறது. உண்மையில் அதை வீடியோஎன்பதை விட வீடியோவடிவிலான ஓவியம் எனகூறிவிடலாம்.
தற்போது, வைரலாகி வரும், அந்த 'வீடியோஓவியத்தை' தனது கேமரா தூரிகையால் வரைந்தவர், திரிஷா, ஸ்ரீகாந்த் நடித்தமனசெல்லாம் படத்தின் இயக்குனரும், ஓவியருமானசந்தோஷ்ஈஸ்வரமூர்த்தி. இவர் எடுத்த, அந்த வீடியோரசிகர்களிடம் மட்டுமில்லாமல், பிரபலங்களிடமும் பாராட்டைபெற்று வருகிறது.
நடிகர் சூரி, தனதுட்விட்டர் பக்கத்தில்அவ்வீடியோவை பகிர்ந்து,"சினிமாக்காரனுக்கு சிங்கிள் டீயும் ஓவியம்தான், ரெண்டு நிமிஷ ஷாட், ரெண்டு மணி நேர படம் பார்த்த திருப்திய கொடுத்துருச்சுனே, மனசெல்லாம் சந்தோஷம்னே" என சந்தோஷ்ஈஸ்வரமூர்த்தியை பாராட்டியுள்ளார். அதேபோல், இயக்குனர் லிங்குசாமியும், " மனசெல்லாம் படத்தின்இயக்குனர் எடுத்த இந்த ஷாட்-டை பார்க்க நேர்ந்தது. உடனே மிகவும் பிடித்துப்போய்விட்டது மட்டுமில்லாமல், இங்கு பகிரவேண்டுமென்றும் தோன்றியது" எனகூறி, அந்த விடியோவைதனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.