Skip to main content

"இரண்டரை வயசு குழந்தைக்கு கண்ணுல ஆபரேஷன். அது என்ன பாவம் செஞ்சிச்சு" - செல்ஃபோன் குறித்து சூரி

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

soori about cell phones

 

காமெடி கதாபாத்திரத்தில் பல படங்களில் நடித்துள்ள சூரி இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இளையராஜா இசையில் விஜய் சேதுபதி, ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் வருகிற 31ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளி ஆண்டு விழாவில் சூரி கலந்து கொண்டு பேசியுள்ளார். அப்போது மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில், "இப்போது எல்லா குழந்தைகளின் கைகளிலும் செல்ஃபோன் இருக்கிறது. செல்ஃபோன் தேவைப்படும் போது மட்டும் அம்மா, அப்பாவிடம் இருந்து வாங்கிக்கோங்க. எல்லா நேரங்களிலும் தயவு செய்து செல்ஃபோனை வாங்காதீங்க. அதில் நல்ல விஷயங்களை விட கெட்ட விஷயங்கள் நிறைய இருக்கு. அதனால் நல்ல விஷயத்துக்கு மட்டும் பயன்படுத்துங்க. 

 

என்னுடைய நண்பரின் இரண்டரை வயசு குழந்தை அடிக்கடி செல்போனை பயன்படுத்தியதால் அந்த குழந்தையின் கண்ணில் இருந்து சீல் மாறி வந்திருச்சு. பின்பு ஆபரேஷன் பண்ணுனதில் கண்ணில் உள்ள நரம்பு கட்- ஆகிருச்சு. அந்த இரண்டரை வயசு குழந்தை என்ன பாவம் செஞ்சிச்சு.

 

குழந்தைகளின் அழுகையை நிறுத்த அப்போதைக்கு நாம் செல்ஃபோனை கொடுக்கிறோம். ஆனால் அதன் விளைவு அக்குழந்தையின் வாழ்க்கையையே பாதித்து விடுகிறது. அதனால் குழந்தைகள் கையில் செல்ஃபோனை கொடுக்காதீங்க. அதற்கு பெற்றோர் முதலில் அளவோடு பயன்படுத்த வேண்டும். பெற்றோர் மற்றும் பெரியவங்க தான் குழந்தைகளை விட அதிகமா செல்ஃபோனை பாக்குறாங்க. அதனால் அவுங்க அளவோடு பயன்படுத்த வேண்டும்" என அட்வைஸ் வழங்கினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும்...’ - காதலில் கருடன் சூரி

Published on 09/02/2024 | Edited on 09/02/2024
garudan movie soori Panjavarna Kiliye video song released

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  

இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வந்தார். இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரிக்கின்றனர்.  

இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் கடந்த மாதம் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. இந்த நிலையில் இப்படத்தின் ‘பஞ்சவர்ண கிளியே...’ பாடலின் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலில் கதாநாயகி ரேவதி ஷர்மா கதாபாத்திரத்திற்கும் சூரி கதாபாத்திரத்திற்குமான காதலை விவரிக்கும் வகையில் உள்ளது. அதை பிரதிபலிக்கும் விதமாக, ‘யாரோட யாரோட என் காதல் கதை பேச. உன் கூட உன் கூட எத வச்சு நான் பேச. மூச்சு முட்ட பேச்சு முட்ட வார்த்தை தவிக்கும். உன்னை பார்த்ததுமே அத்தனையும் செத்து கிடக்கும்’ போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.  

Next Story

“இது சீரியஸ் படம் அல்ல, பக்காவான கமர்சியல்” - ராம்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
director ram about his Yezhu Kadal Yezhu Malai movie

இயக்குநர் ராம் 'பேரன்பு' படத்தைத் தொடர்ந்து, 'ஏழு கடல் ஏழு மலை' என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கியுள்ளார். இதில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்துள்ளனர். 'வி ஹவுஸ் ப்ரொடக்‌ஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்திப்ன் கிளிம்ப்ஸ் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. 

இதையடுத்து நெதர்லாந்தில் நடைபெறும் ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் 'பிக் ஸ்க்ரீன் போட்டிப் பிரிவில்' திரையிட தேர்வாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன் படி கடந்த ஜனவரி 25 தேதி தொடங்கி வருகிற பிப்ரவரி 4 வரை நடைபெறுகிற 53வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில், கடந்த 30ஆம் தேதி 'ஏழு கடல் ஏழு மலை' படம் திரையிடப்பட்டது. 

இதற்காக நெதர்லாந்து சென்றுள்ள படக்குழு, விழாவில் பங்கேற்றது. படம் திரையிட்ட பிறகு அது குறித்த அனுபவம் பகிர்ந்த சூரி, “இங்க உள்ள மக்கள் படங்களுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறாங்க. இந்த மாதிரி விழாவில் கலந்துகிட்ட பிறகு தான், நம்ம தமிழ் படத்துக்கு எவ்ளவு மரியாதை இருக்கு-ன்னு தெரியுது. கண்டிப்பா இந்தப் படம் உலகளவில் நல்ல பேரை வாங்கும்” என்றார்.    

பின்பு பேசிய ராம், “படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. விழாக்களில் திரையிடுவதால் ரொம்ப சீரியஸ் படம்னு நினைச்சிடாதீங்க. உண்மையாகவே பக்காவான கமர்சியல் படம். கோடைகாலத்தில் இப்படம் திரையரங்கில் வெளியாகும்” என்றார்.