Skip to main content

'இனி எனக்கு ட்விட்டர் வேணாம்' - திடீரென ட்விட்டரில் இருந்து விலகிய தனுஷ் பட நாயகி 

Published on 08/10/2018 | Edited on 08/10/2018
sonam

 

 

 

அனில் கபூரின் மகளும் தனுஷ் நடித்த 'ராஞ்சனா' படத்தின் நாயகியுமான சோனம் கபூர் 'சஞ்சு' படத்தையடுத்து 'ஏக் லடக்கி கோ தேகா தோ ஐஸா லகா' மற்றும் துல்கர் சல்மானுடன் 'ஜோயா பேக்டர்' என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் ட்விட்டர் சமூக வலைதளதில் இருந்து விலகுவதாக ட்விட்டரில் தற்போது அறிவித்துள்ளார். அதில்.. "சில காலங்களுக்கு ரசிகர்களுடன் உரையாடுவது இல்லை என்ற முடிவை எடுத்துள்ளேன். ட்விட்டர் மிக எதிர்மறையாக உள்ளது. அனைவருக்கும் அமைதியும், அன்பும் ஏற்படட்டும்" என பதிவிட்டுள்ளார். சோனம் கபூர் தீடிரென்று இப்படி ஒரு முடிவை எடுத்ததற்கு குறிப்பிடத்தக்க சம்பவம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் மும்பையில் சுற்று சூழல் சீர்கேடு குறித்து சோனம் சமீபத்தில் ட்விட்டரில் போட்ட பதிவுக்கு எதிராக நபர் ஒருவர் வெளியிட்ட பதிவையடுத்தே சோனம் கபூர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரபல நடிகையின் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை; இருவர் கைது

Published on 13/04/2022 | Edited on 13/04/2022

 

sonam kapoor anand ahuja new delhi residence theft case 2 person arrested

 

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள சோனம் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனது கணவருடன் மும்பையில் வசித்து வரும் சோனம் கபூர் தற்போது கர்ப்பமாக உள்ளார். 

 

கடந்த பிப்ரவரி மாதம் சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவுக்கு சொந்தமான டெல்லி இல்லத்தில் ரூ. 2 கோடி மதிப்புள்ள நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வீட்டின் பணியாளர்கள், தோட்டக்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற மொழி ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வந்தனர். 

 

இந்நிலையில் அந்த வீட்டில் செவிலியராக பணிபுரிந்து வரும் அபர்ணா ரூத் வில்சன் என்பவரை டெல்லி போலீஸ் கைது செய்துள்ளனர். சந்தேகத்தில் பேரில் அபர்ணா ரூத் வில்சனிடம் போலீஸ் நடத்திய விசாரணையில் தனது கணவர் ரூத் வில்சனுடன் இணைந்து இந்த கொள்ளை சம்பவத்தை நடத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை மீட்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.    

 

 

Next Story

பிரபல நடிகையின் வீட்டில் கோடிக்கணக்கில் கொள்ளை!

Published on 09/04/2022 | Edited on 09/04/2022

 

Rs 1.41 crores robbery Sonam Kapoor Anand Ahuja's house Delhi

 

பாலிவுட்டில் பல படங்களில் நடித்துள்ள சோனம் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆனந்த் அஹுஜா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தனது கணவருடன் மும்பையில் வசித்து வரும் சோனம் கபூர் தற்போது கர்ப்பமாக உள்ளார். 

 

இந்நிலையில் சோனம் கபூர் - ஆனந்த் அஹுஜாவுக்கு சொந்தமான டெல்லி இல்லத்தில் பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாகக்  கூறப்படுகிறது. இந்த வீட்டில் சோனம் கபூரின் மாமனார், மாமியார் மற்றும் ஆனந்த் அஹுஜாவின் பாட்டி சரளா அஹுஜா ஆகியோர் வசித்து வரும் நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இந்த கொள்ளை சம்பவம்  நிகழ்ந்துள்ளது. இதில் ரூ. 1.41 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை திருடர்கள் கொள்ளையடித்து உள்ளனர். இதுகுறித்து ஆனந்த் அஹுஜாவின் பாட்டி சரளா அஹுஜா காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் அந்த புகாரில் இரண்டு ஆண்டுகள் கழித்து கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி பணம் மற்றும் நகைகள் சரியாக இருக்கிறதா என்று சோதனை செய்யும் பொழுது தான் இந்த திருட்டு சம்பவம் அரங்கேறியுள்ளது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

 

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து போலீசார் சந்தேகத்தின் பேரில் வீட்டின் பணியாளர்கள், தோட்டக்காரர்கள், ஓட்டுநர்கள் மற்றும் பிற மொழி ஊழியர்கள் என பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.