Skip to main content

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக சோனம் கபூர் எடுத்த முடிவு 

Published on 30/04/2018 | Edited on 01/05/2018
sonam kapoor


பிரபல ஹிந்தி நடிகர் அனில்கபூரின் மகளும், நடிகையுமான சோனம் கபூர் தனது காதலர் ஆனந்த் அஹுஜாவை வரும் மே மாதம் முதல் வாரத்தில் திருமணம் செய்ய இருக்கிறார். இந்நிலையில் தன் பெரியம்மா ஸ்ரீதேவியின் மறைவு காரணமாக தனது திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்து இருக்கிறார் நடிகை சோனம் கபூர். மும்பையிலேயே எளிமையாக நடக்கும் திருமண நிகழ்ச்சியில் இரு வீட்டாரும், நெருங்கிய நண்பர்களும் மட்டுமே கலந்து கொள்ள இருக்கிறார்கள்.சோனம் கபூரின் திருமணம் எளிமையாக நடந்தாலும், வரவேற்பு நிகழ்ச்சியை மும்பை, டெல்லி ஆகிய இரண்டு நகரங்களில் மிக சிறப்பாக நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள். வரவேற்பு நிகழ்ச்சியில், ஸ்ரீதேவியின் பட பாடல்களுக்கு அவருடைய மகள் ஜான்வி கபூர் நடனம் ஆடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ரீ தேவி மகள் ஜான்வி மனதை கவர்ந்த நடிகர் 

Published on 31/05/2018 | Edited on 01/06/2018
jhanvi


நடிகை ஸ்ரீதேவி இறந்ததற்கு பிறகு தற்போது கொஞ்சம் சகஜ நிலைக்கு மாறியிருக்கும் அவரது மகள் ஜான்வி தற்போது மராத்தி மொழியில் மாபெரும் வெற்றிபெற்ற 'சாய்ரட்' படத்தின் ஹிந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் நடிகை ஜான்வி தென்னிந்திய சினிமா குறித்து மனம் திறந்து பேசுகையில்... "இந்தியிலும் சரி, தென் இந்திய மொழிகளிலும் சரி எனக்கு பிடித்த நடிகர் தனுஷ் தான். அவர் தேர்ந்தெடுக்கும் கதாபாத்திரங்களும் அவரது நடிப்பும் என்னை கவர்ந்துவிட்டது" என கூறியுள்ளார். மேலும் அவரை விரைவில் ஸ்ரீ தேவி போல் தமிழ் சினிமாவில் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. 

Next Story

ஸ்ரீதேவி மரண வழக்கில் நீதிமன்றம் உத்தரவு! 

Published on 11/05/2018 | Edited on 12/05/2018
irumbu thirai.jpeg

 

 

sri devi


நடிகை ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் துபாயில் உள்ள ஓட்டல் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். இது திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்து தகவல் பரவியதையடுத்து, துபாய் போலீசார் விசாரணை நடத்தி, அதன்பின்னர் உடலை ஒப்படைத்தனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் இன்னமும் சந்தேகம் இருப்பதாகவும், அவரது மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இயக்குனர் சுனில் சிங் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் அவரது மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. துபாய் போலீசார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படும் அம்சம் எதுவும் இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டி இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.