Skip to main content

''நாய்கள் கரோனாவைப் பரப்புகிறதா...?'' - சோனாக்‌ஷி சின்ஹா காட்டம்!

Published on 09/04/2020 | Edited on 09/04/2020

கரோனா வைரஸ் தொற்றால் உலகமே அரண்டுபோயுள்ள நிலையில், கரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்துள்ளது. இதனால் திரையுலகமே முடங்கியுள்ள நிலையில், நடிகர்கள் பலரும் பொதுமக்களுக்கு வீடியோக்கள் மற்றும் சமூகவலைத்தள பதிவுகள் மூலம் கரோனா விழிப்புணர்வை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது ஹிந்தி நடிகை சோனாக்‌ஷி சின்ஹா, வளர்ப்புப் பிராணிகளின் மூலம் கரோனா வைரஸ் பரவுவதாக செய்தி பரவியதையடுத்து பலரும் தங்கள் செல்ல பிராணிகளை ரோட்டில் அனாதையாக விட்டு விடுவதை கண்டித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...

 

gdg

 

''செல்லப் பிராணிகளால் கரோனா வைரஸ் பரவுகிறது என்று நம்பி, சிலர் தங்கள் நாய்களைக் கைவிடுவதாக சில தகவல்களை கேள்விப்படுகிறேன். உங்களிடம் சொல்ல என்னிடம் ஒரு செய்தி உள்ளது. நீங்கள் எல்லாம் முட்டாள்கள். நீங்கள் கைவிட வேண்டியது உங்கள் அறியாமையையும், மனிதநேயமற்ற செயல்களையும்தான். நாய்கள் கரோனாவைப் பரப்புவதில்லை. விலங்குகளிடம் அன்பாக இருப்போம்'' என கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரஜினி பட நடிகைகளுடன் பாலிவுட்டில் அறிமுகமாகும் மஹத்  

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Mahat starring Huma Qureshi with Sonakshi Sinha in bollywood movie

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் மஹத் ராகவேந்திரா, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் ‘2030’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். 

 

இதனிடையே, நடிகர் மஹத் ராகவேந்திரா பாலிவுட்டில் ஒரு படம் நடித்துவருகிறார்.  சோனாக்ஷி சின்ஹா, ஹுமா குரேஷி இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் மஹத் ராகவேந்திரா நடித்துவருகிறார். இவர் பாலிவுட் சினிமாத்துறையில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். சத்ரம் ரமணி இயக்கும் இப்படத்திற்கு முதாசர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.  40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, தற்போது டெல்லியில் மஹத் ராகவேந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 

 

ad

 

இப்படம் தொடர்பாக நடிகர் மஹத் கூறுகையில், "எனக்கு மும்பையில் சதீஷ் சென் என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். படத்தில் நடிப்பதற்காக நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்த முதாசர் அஜிஸ்க்கு எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதில் எனது லுக் பிடித்துப்போக, உடனே படத்தின் இயக்குநர் சத்ரம் ரமணி ஜூம் காலில் என்னை தொடர்புகொண்டு இப்படத்தின் கதையைக் கூறினார். பின்னர் முழு கதையையும் மின்னஞ்சல் செய்த அவர், இப்படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீர்கள் என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஹுமா குரேஷி இருவருடனும் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பாலிவுட் சினிமா துறையில் அறிமுகமாகும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பார்ஸி மிஷ்ரா  அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

 

 

Next Story

நடிகையின் பதிவில் மோசமான வார்த்தைகளால் கமெண்ட் செய்த நபர் கைது! 

Published on 22/08/2020 | Edited on 22/08/2020
sonakshi sinha

 

 

சைபர் புல்லிங்கிற்கு எதிராக மும்பை போலீஸார் மற்றும் சைபர் நிபுணர்களுடன் இணைந்து ‘மிஷன் ஜோஷ்’ என்ற அமைப்பை தொடங்கினார் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.  

 

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி இணையத்தில் நடைபெறும் கேலி, கிண்டல் குறித்து சோனாக்‌ஷி சின்ஹா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் சிலர் மிகவும் மோசமான அருவருக்கத்தக்க வகையில் கமெண்ட் செய்துள்ளனர். அவ்வாறு செய்தவர்களின் பெயர்களின் லிஸ்ட்டை எடுத்து மும்பை போலீஸாரிடம் ஒப்படைத்தார் சோனாக்‌ஷி. அதனடிப்படையில் அவுரங்காபாத்தை சேர்ந்த சசிகாந்த் குலாப் ஜாதவ் என்ற 27 வயது இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர். 

 

போலீஸாரின் இந்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ள சோனாக்‌ஷி, “என்னுடயை புகாரின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்த மும்பை சைபர் க்ரைம் போலீஸாருக்கு நான் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். மற்றவர்களும் இதேபோல துணிந்து புகார் அளிக்க வேண்டும் என்பதற்காகவே நான் அவர்கள் மீது புகார் அளித்தேன். நமக்கும் மற்றவருக்கும் நடக்கும் ஆன்லைன் கிண்டல்களை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கக்கூடாது'' என்று தெரிவித்துள்ளார்.