Skip to main content

“அவர் பிரச்சனையைக் குறிப்பிட்டு விளம்பரம் தேடுகிறார்கள்”- சோனாக்‌ஷி காட்டம்!

Published on 16/06/2020 | Edited on 16/06/2020

 

sonakshi sinha


எம்.எஸ் தோனியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத், நேற்று மும்பை பாந்த்ராவிலுள்ள இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 34 வயதே ஆன சுசாந்த், தனது பொறியியல் படிப்பைப் பாதியிலேயே விட்டுவிட்டு, நடிப்பின் மீது ஆர்வம் கொண்டு ஹிந்தி டிவி சீரியலில் நடிகராக நடிக்க தொடங்கினார். அதன்பின் டிவி சீரியலிருந்து விடைபெற்று சினிமாக்களில் நடிக்க தொடங்கினார்.
 


'கை போ சே', 'ஷுத் தேஸி ரொமான்ஸ்', 'டிடெக்டிவ் ப்யோம்கேஷ் பாக்‌ஷி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள சுசாந்த், சில வெற்றிகளையும் தோல்விகளையும் ஒரு சேர ருசித்துள்ளார். கடந்த ஐந்து மாதங்களாக மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிகிறது. இவரின் மறைவிற்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இந்திய விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்தனர்.

இதனிடையே அவரது உடல் மும்பையிலுள்ள வைல் பார்லே என்னும் இடத்தில் தகனம் செய்யப்பட்டது. அவரது இறுதி சடங்கில் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஏராளமான பிரபலங்கள் பங்குகொண்டனர். ஸ்ரெத்தா கபூர், கிரிதி சனோன், ராஜ்குமார் ராவ், விவேக் ஓபராய், ஏக்தா கபூர், வருண் சர்மா, ரன்வீர் ஷெராய், ரியா சக்கரவர்த்தி போன்ற பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
 

 


ஒருசிலர் சுசாந்தின் தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் இருக்கும் வாரிசு அரசியல்தான் என்று கடுமையாக விமர்சித்து வருகின்றனர். கங்கனா ரனாவத் சுசாந்தின் திறமையை பாலிவுட் அங்கீகரிக்கவில்லை என்றே வெளிப்படையாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இந்நிலையில் இவ்வாறு விமர்சிப்பவர்களைக் கடுமையாகச் சாடியுள்ளார் சோனாக்‌ஷி சின்ஹா. அவர் பதிவிடுகையில், “பன்றிகளுடன் சண்டை போடுவதில் என்ன பிரச்சினை என்றால், பன்றிகளுக்கு அது சந்தோஷமாக இருக்கும். ஆனால், நம் மீது அழுக்காகும். நமது துறையின் உறுப்பினர் ஒருவர் காலமாகியிருக்கும்போது சிலர் அவர்கள் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுச் சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். தயவுசெய்து அதை நிறுத்துங்கள். நீங்கள் உமிழும் எதிர்மறை கருத்தும், வெறுப்பும், நச்சும் இப்போது தேவையில்லாதது. மறைந்தவருக்குக் கொஞ்சம் மரியாதை கொடுங்கள்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சுஷாந்த் சிங் போதை பழக்கத்திற்கு காதலி ரியா உடந்தை - குற்றப்பத்திரிகை தாக்கல்

Published on 13/07/2022 | Edited on 13/07/2022

 

Girlfriend Riya complicit in Sushant Singh's drug addiction - charge sheet filed by NCB by

 

இந்தி திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி மும்பையில் தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இது தொடர்பான வழக்கில் ரியா சக்ரவர்த்தி 2020-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைதாகி பின்பு ஒரு மாதம் கழித்து மும்பை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றார். பின்பு போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தற்போது வரை விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்நிலையில் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கில் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அதில் ரியா சக்ரவர்த்தி உள்ளிட்ட 35 பேர் மீது மொத்தம் 38 குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையில், "ரியா சக்ரவர்த்தி, அவரது சகோதரர் ஷோயிக்,சாமுவேல் மிராண்டா உள்ளிட்ட பலரிடம் பலமுறை கஞ்சா வாங்கி மறைந்த நடிகர் சுஷாந்த் சிங்கிடம் வழங்கியுள்ளார். போதைப்பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்து அவரும் அதனை உட்கொண்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் வரை  போதைப்பொருட்களை வாங்க, விற்க, விநியோகம் செய்துள்ளனர்." என குறிப்பிடப்பட்டுள்ளது . 

 

ரியா சக்ரவர்த்தி போதை பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சுஷாந்தின் தீவிர போதைப் பழக்கத்திற்கு அவரின் காதலி ரியாவும் உடந்தையாக இருந்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.     
 

 

  

Next Story

ரஜினி பட நடிகைகளுடன் பாலிவுட்டில் அறிமுகமாகும் மஹத்  

Published on 18/11/2021 | Edited on 18/11/2021

 

Mahat starring Huma Qureshi with Sonakshi Sinha in bollywood movie

 

தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகராக இருக்கும் மஹத் ராகவேந்திரா, விஜய், அஜித், சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் ‘2030’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார். 

 

இதனிடையே, நடிகர் மஹத் ராகவேந்திரா பாலிவுட்டில் ஒரு படம் நடித்துவருகிறார்.  சோனாக்ஷி சின்ஹா, ஹுமா குரேஷி இருவரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் அவர்களுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் மஹத் ராகவேந்திரா நடித்துவருகிறார். இவர் பாலிவுட் சினிமாத்துறையில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாகும். சத்ரம் ரமணி இயக்கும் இப்படத்திற்கு முதாசர் அஜிஸ் கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.  40 நாட்கள் லண்டனில் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, தற்போது டெல்லியில் மஹத் ராகவேந்திரா சம்பந்தப்பட்ட காட்சிகளைப் படமாக்கி முடித்துள்ளது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. 

 

ad

 

இப்படம் தொடர்பாக நடிகர் மஹத் கூறுகையில், "எனக்கு மும்பையில் சதீஷ் சென் என்ற நண்பர் ஒருவர் இருக்கிறார். படத்தில் நடிப்பதற்காக நடிகர்களைத் தேர்வு செய்துகொண்டிருந்த முதாசர் அஜிஸ்க்கு எனது புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதில் எனது லுக் பிடித்துப்போக, உடனே படத்தின் இயக்குநர் சத்ரம் ரமணி ஜூம் காலில் என்னை தொடர்புகொண்டு இப்படத்தின் கதையைக் கூறினார். பின்னர் முழு கதையையும் மின்னஞ்சல் செய்த அவர், இப்படத்தில் நீங்கள்தான் நடிக்கிறீர்கள் என்றார். நானும் ஒப்புக்கொண்டேன். படத்தில் சோனாக்ஷி சின்ஹா, ஹுமா குரேஷி இருவருடனும் நடித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் பாலிவுட் சினிமா துறையில் அறிமுகமாகும் இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த பார்ஸி மிஷ்ரா  அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என கூறியுள்ளார்.