
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடிக்கும் படம் 'உயர்ந்த மனிதன்'. அமிதாப் பச்சன் முதல்முறையாக தமிழில் நடிக்கும் இப்படத்தை தமிழ்வாணன் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கி நடைபெற்று வந்த நிலையில், இப்படத்திலிருந்து அமிதாப் பச்சன் விலகியதாக சமீபத்தில் தகவல்கள் கசிந்தன. இந்நிலையில் இதற்கு எஸ்.ஜே.சூர்யா விளக்கம் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்...

"அமிதாப் பச்சன் மற்றும் தயாரிப்பு நிறுவனம் இடையே ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விரைவில் அது சரிசெய்யப்பட்டு படப்பிடிப்பு மீண்டும் துவங்கும். 'மான்ஸ்டர்' படத்தின் ரிலீசுக்கு பிறகு நான் மும்பை சென்று பிரச்சனைக்கு தீர்வு காண்பேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகளை தாண்டி தான் இந்த இடத்திற்கு வந்துள்ளோம். படப்பிடிப்பின் மூன்றாவது நாளில் அமிதாப் சார் பதிவு செய்த ட்வீட்டில் அவரது அன்பும், எங்களது உழைப்பின் மீது அவர் வைத்திருந்த மரியாதையும் தெரிந்தது. எதிர்மறை விமர்சனங்களை தவிர்க்கவும்" என பதிவிட்டுள்ளார்.