Advertisment

"ஏய் ஏய் யாருப்பா இது என்னப்பா நடக்குது" - ஷாக்கான எஸ் ஜே சூர்யா

sj Suryah tweet about Manmatha Leelai Glimpse video

சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபு அடுத்ததாக ‘மன்மதலீலை’ என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தை இயக்கி வருகிறார். அசோக்செல்வன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் சம்யுக்தா ஹெக்டே, ஸ்மிருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். இப்படத்திற்கு பிரேம் ஜி இசையமைக்கிறார்.இப்படத்தின் க்ளிம்பஸ் வீடியோவை நேற்று (10.2.2022) நடிகர் சிம்பு வெளியிட்டிருந்தார். முத்தக்காட்சிகள் நிறைந்த இந்த க்ளிம்பஸ் வீடியோ ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

Advertisment

alt="sj Suryah tweet about Manmatha Leelai Glimpse video" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="d9137a7c-50ef-4a6e-8a9a-1c236070cc78" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad%20%281%29_18.jpg" />

Advertisment

இந்நிலையில் மன்மதலீலை க்ளிம்பஸ் வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏய் ஏய் ஏய் யாருப்பா இது என்னப்பா நடக்குது..." என நகைச்சுவையாக கேட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தில் நீங்கள் நடித்திருந்தால்நன்றாகஇருந்திருக்கும் என்று அவரின் பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

venkat prabhu Manmatha Leelai movie
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe