Advertisment

"எனக்கும் சிம்புவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு" - எஸ்.ஜே சூர்யா 

gadgdsagasd

Advertisment

'ஈஸ்வரன்' படத்தைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் 'மாநாடு'. வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். நீண்ட இழுபறிக்குப் பிறகு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த நவம்பர் மாதம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் மோஷன் போஸ்டரும் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன. இதையடுத்து மாநாடு படத்தில் இடம்பெற்றுள்ள 'மெஹெரசைலா' என்ற பாடலை முதல் பாடலாகப் படக்குழு வெளியிட்டது. இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இந்த பாடல் உருவான விதம் குறித்தும், படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும் நடிகர் எஸ்.ஜே சூர்யா ட்விட்டர் ஸ்பேஸ் தளத்தின் வழியாகப் பகிர்ந்துகொண்டனர். அதில்...

"எனக்கும் சிம்புவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. ஒன்னு ரெண்டு பேருமே உச்சத்துல இருப்போம். இல்லேன்னா ரெண்டு பேருமே சிக்கல்ல இருப்போம். சிம்பு பான் இந்தியா படம் பண்ணனும். அதுக்கு 'மாநாடு' ஒரு ஆரம்பமா இருக்கும். கரோனா தொற்றால பாதிக்கப்பட்ட சமயத்துல கூட படத்தோட கேமராமேன் வந்து வேலை பார்த்தாரு. அதைவிட ஆச்சரியம்; அவரை சிம்பு கட்டிப்புடிச்சு பாராட்டுனாரு. கல்யாணி பிரியதர்ஷனை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு மாடர்ன் ரேவதி தான் ஞாபகத்துக்கு வருவாங்க. வெங்கட்பிரபு கிளாசா படம் எடுக்கிறவரு. அவருகிட்ட நம்ம கரகாட்டக்காரன் ஆடியன்ஸையும் சந்தோஷப்படுத்தணும் மறந்துறாதீங்கன்னு சொன்னேன்” என்றார்.

maanaadu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe