Advertisment

"எட்டு நாள் வேலை ஐந்து நாளில் முடிந்தது..." - மாநாடு அப்டேட் கொடுத்த எஸ்.ஜே.சூர்யா!

sj Surya

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகிவரும் படம் ‘மாநாடு’. இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படம் வரும் தீபாவளி தினத்தையொட்டி வெளியாக இருந்த நிலையில், திடீரென தீபாவளி வெளியீட்டில் இருந்து பின்வாங்கி மாநாடு படக்குழு, நவம்பர் 25ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவித்தது.

Advertisment

இந்த நிலையில், மாநாடு படத்திற்கான டப்பிங் பணிகளைத்தான் நிறைவுசெய்துவிட்டதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என்னுடைய காட்சிகளுக்கான எட்டு நாள் டப்பிங் வேலையை ஐந்து நாளில் முடித்துவிட்டேன். என்னுடைய நாடி, நரம்பு, கழுத்து, முதுகிற்கு குறைந்தபட்சம் பத்து நாட்களுக்காவது ஓய்வு தேவைப்படும். அதிக வேலை காரணமாக வலி பின்னுது. ஆனால், படத்தின் இறுதி வடிவத்தைப் பார்த்துவிட்டதால் ஒன்று கூறுகிறேன். தீபாவளி நவம்பர் 25 தான்டா" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

maanaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe