Skip to main content

“எத்தனையோ சவாலைச் சந்தித்தவர் நீங்கள்..”- நடிகர் சிவகுமார் உருக்கம்!

Published on 18/08/2020 | Edited on 18/08/2020

 

sivakumar

 

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தது. அதன்பின் திடீரென அவர் கவலைக்கிடமாக இருக்கிறார் என்று அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து எஸ்.பி.பி.யின் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அவருக்காக பிரார்த்தனை மேற்கொண்டனர். இந்நிலையில், மீண்டும் எஸ்.பி.பி. உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. அவருடைய மகனான சரண், அடிக்கடி எஸ்.பி.பியின் உடல்நலம் குறித்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

 

இந்நிலையில் நடிகர் சிவகுமார் எஸ்.பி.பி குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், “பாலு. என்னை விட நீங்கள் 4 வயசு சின்னவர். அதனால் நாங்கள் உங்களை தம்பி என்றே கூப்பிடலாம். உலகமே கொண்டாடக் கூடிய ஒப்பற்ற பாடகர் நீங்க. நிறைகுடம். 100-க்கும் மேலான படங்களில் எனக்காக டூயட் பாடியிருக்கிறீர்கள்.

 

முதன் முதலில் நீங்கள் எனக்கு எந்தப் படத்தில் டூயட் பாடினீர்கள் என்று ஞாபகம் இருக்கிறதா? 'மூன்று தெய்வங்கள்' படத்தில் 'முள்ளில்லா ரோஜா' பாடல் தான் நீங்கள் எனக்காகப் பாடிய முதல் பாட்டு. அதுக்கு அப்புறம் 'tongue twister' மாதிரி ஒரு பாட்டுக் கொடுத்து கண்காட்சியில் பாடச் சொன்னார்கள். அதில் நீங்கள் பிச்சியிருப்பீர்கள்.

 

அதற்குப் பிறகு 'என் கண்மணி' என்ற பாடல் உலகமெங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேல் இப்பவும் மறக்க முடியாதது, எனது 100 ஆவது படத்தில் "மாமன் ஒருநாள் மல்லிகைப்பூ கொடுத்தான்" என்று பாடினீர்களே.

 

http://onelink.to/nknapp

 

அதே போல் "உச்சி வகுந்தொடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி" என்ற பாடலுக்கு நீங்கள் கொடுத்த எமோஷனுக்கு 45 நாட்கள் காடுகளிலும், மலைகளிலும் நடந்து உதடுகளில் எல்லாம் ரத்தம் வரவைத்து நடித்தேன். வாழ்க்கையில் எத்தனையோ சவாலைச் சந்தித்தவர் நீங்கள். கரோனாவும் ஒரு சவால் தான். சீக்கிரமாகக் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியே வா பாலு” என்று தெரிவித்துள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்