sivakarthikeyan tweet about maanaadu movie

Advertisment

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்துள்ளார். இதில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 25ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைபெற்றுவருகிறது.இதனைத் தொடர்ந்து ‘மாநாடு’ படக்குழுவினருக்கு நடிகர் ரஜினிகாந்த் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிவகார்த்திகேயன் 'மாநாடு' படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர்கள் சிம்பு, எஸ்.ஜே. சூர்யா, நடிகை கல்யாணி பிரியதர்ஷன், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோரின்பெயர்களைக் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளித்த பிரேம்ஜி, ‘படத்தில் நானும் நடித்திருக்கிறேன். எனக்கு இல்லையா வாழ்த்து’ என்ற பாணியில் சிவகார்த்திகேயனிடம் கேட்டார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="e57e6a81-6b9d-4b05-9d82-76daa1a81211" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/article-inside-ad_69.jpg" />

Advertisment

இதையடுத்து பிரேம்ஜியின் ட்வீட்டுக்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், "சார் நீங்களும் வெங்கட் பிரபு சாரும் ஒண்ணுதான்னுநெனச்சு உங்கள் பெயரை சேர்க்கவில்லை சார்... இப்போ சொல்லுங்க நா பண்ணது தப்பா சார். உங்கள்வெற்றி தொடர வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்தப் பதிவை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.