தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிமிக்கிரிகலைஞராக இருந்த சிவகார்த்திகேயன் தனது திறமையால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறியுள்ளார்.நடிப்பை தாண்டி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவராகவிளங்கும் சிவகார்த்திகேயன் தற்போது 'டான்' 'அயலான்' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.இதையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த 17 ஆம் தேதி தனது 37 வதுபிறந்தநாளை கொண்டாடினர். இதற்கு ரசிகர்கள். திரைபிரபலங்கள்என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்நிலையில் ரசிகர்கள், நண்பர்கள், நலம் விரும்பிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கையின் மூலம் நன்றிதெரிவித்துள்ள நடிகர் சிவகார்த்திகேயன், "இந்த பிறந்தநாளை மறக்க முடியாத நாளாக மாற்றியதற்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.