Advertisment

“அவங்களுக்காக நாம பண்ண வேண்டியது ஒன்னே ஒன்னுதான்”- சிவகார்த்திகேயன் உருக்கம்!

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Advertisment

sk

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

உலகளவில் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (24/03/2020) உயிரிழப்பு சுமார் 16 ஆயிரம் அளவில் இருந்த நிலையில் ஒரே நாளில் உலகளவில் சுமார் 2,000 பேர் இறந்தனர்.

Advertisment

உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மலமலவென உயர்ந்து நான்கு லட்சத்தை எட்டியுள்ளது. கரோனாவின் தாக்கம் இந்தியாவிலும் உயரத் தொடங்கியுள்ளது. இன்று தமிழ்நாட்டில் முதன் முதலாக ஒருவர் கரோனா வைரஸின் தாக்கத்தால் இறந்துள்ளார். அதேபோல பலரும் கரோனா வைரஸ் பரவலால் அச்சத்தில் இருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மக்களுக்குக் கரோனா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "இந்த வீடியோ கரோனா வைரஸைப் பற்றியதுதான். அவர்களுடைய உடல் நலம், குடும்பத்தைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் தன்னலமற்று உழைத்துக் கொண்டிருக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதாரத்துறை அமைச்சர், அரசு அதிகாரிகள், காவல்துறை, தீயணைப்புத் துறை, பத்திரிகை, ஊடகத்துறை நண்பர்கள், அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க வேண்டும் என உழைக்கும் அனைவருக்கும் நன்றிகள் மற்றும் சல்யூட்.

அவர்கள் அனைவருக்கும் நாம் பண்ண வேண்டியது ஒன்றே ஒன்றுதான். அவர்கள் நம்மிடம் கேட்பதும் ஒன்றுதான். வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். வீட்டிற்குள்ளேயே இருங்கள் என்பதுதான். அவசரத் தேவை என்றால் மட்டும் வெளியே வாருங்கள். இன்னும் கரோனாவின் தீவிரம் தெரியாமல் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு 10- 20 பேருக்காவது இந்த வீடியோ போய்ச் சேரும் என்றுதான் இந்த வீடியோவைப் போட்டுள்ளேன்.

வீட்டிற்குள்ளேயே இருப்போம். நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள என்னவெல்லாம் பண்ண வேண்டும் என நிறையப் பேர் சொல்லிவிட்டார்கள். முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதுதான். அப்படிச் செய்தாலே இந்த கரோனா தொற்றிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும். இதை அனைத்தையும் முறியடிக்க முடியும். நான் நம்புவது எப்போதும் ஒரே விஷயத்தைத்தான். உலகத்தின் தலைசிறந்த சொல் செயல். செய்து காட்டுவோம்" என்று தெரிவித்துள்ளார்.

actor sivakarthikeyan corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe