ADVERTISEMENT
ADVERTISEMENT
சிவகார்த்திகேயன் தற்போது ராஜேஷ்.எம் இயக்கத்திலும், ரவிக்குமார் இயக்கத்திலும் ஒரே நேரத்தில் நடித்து வரும் நிலையில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி இரண்டாவது பாதியில் துவங்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். அரசியல் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகும் இப்படத்தை 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.
Show comments