'எதற்கும் துணிந்தவன்' படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன்

sivakarthikeyan join to surya's etharkkum thunindhavan movie

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். சூரி, வினய் ராய், சத்யராஜ் உள்ளிட்ட பலர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு டி. இமான் இசையமைக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="dd4bda71-071e-4cbc-b642-825c35a4cddc" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/jango-inside-news-ad_58.jpg" />

இந்நிலையில், 'எதற்கும் துணிந்தவன்' படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தின் பாடல்களை கவிஞர் யுகபாரதி, இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகர்சிவகார்த்திகேயன் ஆகிய மூவரும் எழுதியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் வெளியான 'டாக்டர்'படத்தில் சிவகார்த்திகேயன் எழுதிய ‘செல்லம்மா..’ பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

actor sivakarthikeyan actor surya Etharkkum Thunindhavan
இதையும் படியுங்கள்
Subscribe