Skip to main content

பிரபல பாலிவுட் சர்ச்சை நாயகியுடன் ஜோடி சேரும் சிவகார்த்திகேயன்?

Published on 06/06/2019 | Edited on 06/06/2019

அண்மையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவில் இல்லை என்பதால் மீண்டும் சிவா மீது கடுமையான விமர்சனங்கள் வந்து பாய்ந்தன. இப்படம் தோல்வி படம்தான் என்று சிவாவே ஒரு மேடையில் ஒப்புக்கொண்டார். 
 

kiara advani

 

 

தற்போது சிவா, பி.எஸ் மித்ரன் இயக்கத்தில் ஹீரோ என்றொரு படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் நடித்து வருகிறார். இந்த மாதமே பாண்டிராஜ் இயக்கத்தில் அனு இமானுவேல் ஹீரோயினாக நடிக்கும் சிவாவின் 16வது படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்படுகிறது. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

இந்த படத்தை தொடர்ந்து சிவாவின் 17வது படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். அதை லைகா நிறுவனம் தயாரிக்கிறது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. தற்போது இந்த படத்திற்கான கதை விவாதம் மற்றும் நடிகர் நடிகைகள் யார் என்ற விவாதம் பேச்சு வார்த்தையில் உள்ளதாம். சிவாவும் விக்னேஷ் சிவனும் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்கலாம் என்ற யோசனையில் உள்ளனர் என்று சொல்லப்படுகிறது.
 

தோனி பையோபிக்கில் சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கியாரா அத்வானி, அதனை அடுத்து பல சர்ச்சை படங்களில் நடித்து வருகிறார். லஸ்ட் ஸ்டோரீஸ் என்ற நெட்பிளிக்ஸ் படம் ஒன்றில் அவரது ஒரு காட்சி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அர்ஜுன் ரெட்டி ஹிந்தி ரீமேக்கில் இவர்தான் ப்ரீத்தி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது மட்டுமல்லாமல் ஹிந்து கி ஜிவானி என்ற படத்திலும் நடிக்கிறார். இந்த டைட்டிலே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நயன்தாரா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

Published on 07/03/2024 | Edited on 07/03/2024
nayanthara instagram story issue

தமிழ், இந்தி, தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பிசியாக நடித்து வரும் நயன்தாரா, தமிழில் சசிகாந்த் இயக்கும் 'டெஸ்ட்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்போது யூடியூப்பர் டியூடு விக்கி இயக்கும் மண்ணாங்கட்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படம் மோகன் ராஜா இயக்கும் தனி ஒருவன் 2 உள்ளிட்ட படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். இது மட்டுமல்லாமல் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதனை இயக்கும் எல்.ஐ.சி படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. 

இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டார். பின்பு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று கொண்டார். இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார். இதன் மூலம் தொழில்முனைவோராக  களம் இறங்கினார். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளை அறிமுகப்படுத்தினார். 

இதனிடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமூக வலைத்தளங்களில் ஒன்றாக இன்ஸ்டாகிராம் பக்கம் தொடங்கினார். அதில் தனது படங்களின் ப்ரொமோஷன், தனது குழந்தைகளின் புகைப்படங்கள், தனது தொழில் நிறுவனத்தின் விளம்பரம் என ஆக்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் கணவர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை அன்ஃபாலோ செய்ததாக சர்சையானது. இதனால் அவரது திருமண உறவு குறித்து பல்வேறு சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டது. 

இதையடுத்து திருமண உறவு குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில் நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்க ஸ்டோரியில் ‘நான் இழந்துவிட்டேன்’ (I'm lost) என குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து பலரும் பல்வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Next Story

தமிழகத்தில் தொடரும் போராட்டம்; ‘அமரன்’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Tamil Nadu staged a road blockade to ban the movie Amaran

கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதே சமயம், படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 

இந்த நிலையில், தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாஹா, அபூபக்கர் சித்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஷேக்கான், பேரவை மாவட்ட செயலாளர் பீர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.