Skip to main content

“அந்த மாதிரி சீன் மட்டும் வச்சிராதீங்க”- சிவகார்த்திகேயன் கண்டிஷன்...

Published on 14/05/2019 | Edited on 14/05/2019

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, சதீஷ், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்  'Mr.லோக்கல்'. இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசயமைக்க, ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. வருகிற மே 17ஆம் தேதி படம் உலகமெங்கும் வெளியாகிறது.
 

rajesh


இந்நிலையில் நேற்று இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நயன்தாராவை தவிர சிவகார்த்திகேயன், இயக்குனர் ராஜேஷ் ,ரோபோ ஷங்கர், தயாரிப்பாளர் , இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

natpe thunai ad


அப்போது பேசிய இயக்குனர் ராஜேஷ், “ ஞானவேல்ராஜா என்னிடம் நான் முதன்முறையாக குடும்பத்தைவிட்டு வெளியே வந்து படம் எடுக்கிறேன் இது நல்லப்படியாக ஓடவேண்டும் என்று மட்டும்தான் சொன்னார். இதனையடுத்து நானும் இப்படி காமெடி, ஃபைட் வைக்க வேண்டும் என யோசிக்கத் தொடங்கிவிட்டேன். இதனையடுத்து சிவா என்னிடம், நம்ப இந்த படத்தில் டாஸ்மாக் சீன், குடித்துவிட்டு பாடுவது, பெண்களை பற்றி இழிவாக பாடுவது போன்ற எந்த விஷயமும் இல்லாமல் ஒரு நல்ல பொழுதுபோக்கான படம் எடுப்போம் என்றார். இந்த இரண்டு விஷயங்கள் மட்டும்தான் படம் எடுக்கத் தொடங்குவதற்கு முன்பு என் மைண்டில் இருந்தது. இதற்காக சரியாக பணி செய்து சக்ஸஸ்ஃபுல்லாக முடித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"உங்களின் அந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்" - தமிழ் நடிகரை பாராட்டிய பவன் கல்யாண்!

Published on 04/09/2020 | Edited on 04/09/2020
hhiohi

 

தெலுங்கின் முன்னணி ஹீரோவாக வலம் வந்த நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தொடங்கிய பிறகு படத்தில் நடிப்பதில்லை என்று விலகியிருந்தார். இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹிந்தியில் வெளியான 'பிங்க்' படத்தை தமிழில் அஜித் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்படுகிறது. 'வக்கீல் சாப்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் தற்போது பவன் கல்யாண் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், இவர் நேற்று முன்தினம் தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். பவனுக்கு பல்வேறு திரைபிரபலங்கள் சமூகவலைதளத்தில் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் பவன் கல்யாணுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்து பவன் கல்யாண் ட்வீட் செய்துள்ளார். அதில்... 

 

"அன்பார்ந்த சிவகார்த்திகேயன். உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. நீங்கள் வெற்றி பெற என் வாழ்த்துகள். உங்களின் 'ஊதா கலரு ரிப்பன்' பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும். எத்தனையோ முறை அதைக் கண்டு ரசித்திருக்கிறேன்" என பதிவிட்டார். இதை கண்ட சிவகார்த்திகேயன், "உங்கள் பதிலைக் காண மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது சார். 'ஊதா கலர் ரிப்பன்' பாடல் உங்களுக்கு பிடித்திருந்தது என அறிந்து மிகவும் மகிழ்ந்தேன். நேரம் ஒதுக்கி அன்பை ஏற்றுக் கொண்டமைக்கும், உங்கள் கனிவான வார்த்தைகளுக்கும் மிகப்பெரிய நன்றி சார்" என பதில் ட்வீட் செய்துள்ளார்.

 

Next Story

சர்ச்சை ட்வீட்டுக்கு விளக்கமளித்த அருண் விஜய்...

Published on 18/05/2019 | Edited on 18/05/2019

சிவகார்த்திகேயன் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் மிஸ்டர் லோக்கல். எஸ்.எம்.எஸ், ஒரு கல் ஒரு கண்ணாடி, ஆல் இன் ஆல் அழகுராஜா போன்ற திரைப்படங்களை இயக்கிய ராஜேஷ்தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். வழக்கமான கதை, காமெடி என்று வழக்கமான ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது என்று கலவையான விமர்சனத்தை இப்படம் பெற்றுள்ளது.
 

arun vijay


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘சீமராஜா’ திரைப்படம் வெளியானபோது, அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் நீயெல்லாம் ஒரு மாஸ் ஹீரோவா? யார் எல்லாம் மாஸ் பண்றதுன்னு ஒரு விவஸ்தை இல்லாமல் போச்சு. தமிழ் ஆடியன்சுக்கு தெரியும். திறமைக்கு மட்டும்தான் மதிப்பு கொடுப்பார்கள்” என்று பதிவிட்டிருந்தார். அது மிகப்பெரிய சர்ச்சையானது. இதன் பின் என்னுடைய ட்விட்டரை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள் என்று பதில் தெரிவித்தார்.

 
மீண்டும் அருண்விஜய் ட்விட்டரில் மிஸ்டர் லோக்கல் படத்தை மறைமுகமாக கலாய்த்துள்ளதாக அவர் போட்ட ஒரு பதிவின் மூலம் சொல்கின்றனர். கிண்டல் செய்யும் விதமாக ஒரு வாயை மூடும் ஸ்மைலியை போட்டுள்ளார், இதை பார்த்த எல்லோரும் கண்டிப்பாக இவர் சிவகார்த்திகேயனை தான் சீண்டுகின்றார் என சிவாவின் ரசிகர்கள் கோபமாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.
 

saa


இந்நிலையில், இந்த ட்வீட்டிற்கு விளக்கமளித்து அருண் விஜய் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், “அடுத்த வாரம் என்னுடைய அடுத்த புரோஜக்ட் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிறது. என்னுடைய கடந்த ட்வீட்டும் அதை சம்மந்தப்படுத்திதான் பதிவு போட்டேன். யாரும் அதை தவறாக புரிந்துக்கொள்ள வேண்டாம். நான் என்னுடைய வேலையை மட்டும் பார்க்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.