sivakarthikeyan and gnanavel raja case postponed april7

கடந்த 2019 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில்வெளியான 'மிஸ்டர் லோக்கல்' படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அண்மையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தொடுத்திருந்தார். அதில், "மிஸ்டர் லோக்கல் படத்திற்கு பேசப்பட்ட ரூ.15 கோடி சம்பளத்தில் ரூ. 11 கோடியை மட்டுமே தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தந்ததாகவும், மீதமுள்ள ரூ.4 கோடியை பெற்று தர வேண்டும் எனவும் நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல அந்த மனுவில் சம்பளப் பாக்கியை செலுத்தும் வரை ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்வதற்கும், தியேட்டர், ஓடிடி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை விதிக்க வேண்டும் எனவும் சிவகார்த்திகேயன் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

Advertisment

இந்நிலையில்இவ்வழக்கில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அதில்,"சிவகார்த்திகேயன் கட்டாயப்படுத்தியதால்தான்மிஸ்டர் லோக்கல் படம் எடுக்கப்பட்டது என்றும், அதனால்தனக்கு 20 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அதில் சிவகார்த்திகேயன் தொடுத்துள்ள மனுவை அபராதத்துடன்தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி எம் சுந்தர், வழக்கு விசாரணையைஏப்ரல் 7 ஆம் தேதிக்குதள்ளி வைத்துள்ளார்.

Advertisment