Advertisment

விஜய் கொடுத்த கிஃப்டில் எது ஸ்பெஷல்? - சிவகார்த்திகேயன் சுவாரஸ்ய பதில் 

sivakarthikeyan about vijay gift in amaran audio launch

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அமரன்’. இப்படத்தை கமல் தயாரித்திருக்க சாய் பல்லவி ஹீரோயினாக நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த முன்னாள் இராணுவ வீரர், மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்கையில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசர் மற்றும் ‘ஹே மின்னலே’ பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இப்படம் வருகிற தீபாவளியன்று(31.10.2024) வெளியாகவுள்ளது. இதனால் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் மணிரத்னம், தயாரிப்பாளர் தாணு, லோகேஷ் கனகராஜ், மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினர் உள்ளிட்ட பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய சிவகார்த்திகேயன் படம் குறித்து பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment

அப்போது அவரிடம் தொகுப்பாளர், கோட் படத்தில் விஜய் உங்களிடம் துப்பாக்கி கொடுத்தார், பின்பு வாட்ச் கிஃப்டாக கொடுத்தார். உங்களுக்கு இந்த ரெண்டுல எது ரொம்ப ஸ்பெஷல் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், “தளபதி கொடுத்த அன்பு. அது தான் எனக்கு ரொம்ப ஸ்பேஷல்” என்றார்.

actor vijay actor sivakarthikeyan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe