நடிகர்கார்த்திநடித்த, 'சிறுத்தை' படம் மூலம், தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. அப்படத்தின் வெற்றி காரணமாக, ரசிகர்களால் 'சிறுத்தைசிவா' எனஅழைக்கப்படுகிறார்.
அதனைத் தொடர்ந்து, 'சிறுத்தை'சிவா அஜித்தை வைத்து 'வீரம்', 'வேதாளம்', 'விவேகம்', 'விஸ்வாசம்' என்று வரிசையாக நான்கு படங்களை இயக்கினார். இதில், 'விஸ்வாசம்' மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது ரஜினியை வைத்து, 'அண்ணாத்தே' படத்தைஇயக்கிவருகிறார்.கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள படத்தின்படப்பிடிப்பு, விரைவில் தொடங்கவுள்ளது.
இந்தநிலையில், இயக்குனர் சிறுத்தைசிவாவின் தந்தை ஜெயக்குமார் காலமானார். வயது சார்ந்தஉடல் நலக் குறைவால்மரணமடைந்த அவருக்கு, பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.