தமிழ் சினிமாவில்முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இமான் தனது படங்களின் மூலம் திறமையான இசைக்கலைஞர்களுக்கு வாய்ப்பளித்து வருகிறார். கண் பார்வையற்றவரானகுருமூர்த்திவிஸ்வாசம்படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலைபாடியதைப்பார்த்த இமான், அவரின்திறமையைப்பாராட்டியதோடு,திருமூர்த்தியைசீறு மற்றும் அண்ணாத்த ஆகிய இரு படங்களில்பாட வாய்ப்பளித்தார்.
இவரைப் போன்றுவைக்கம்விஜயலட்சுமி, கும்கி படத்தில்மகிழினிதமிழ்மாறன்,வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில்ஹரிஹரசுதான்,சீமராஜாபடத்தில் செந்தில் கணேஷ் உள்ளிட்ட திறமையானஇசைக்கலைஞர்களைத்தனது படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் இமானின் பட்டியலில் அடுத்தாகசேர்ந்திருப்பவர் இளம் பாடகிஸ்வஸ்திகாசாமிநாதன். இமான் இசையமைத்துவரும்வரும்பப்ளிக்படத்தில்இடம்பெற்றுள்ள 'அணையா விளக்கு..." என்ற பாடலைஸ்வஸ்திகாசாமிநாதன்பாடுவதற்கு வாய்ப்பளித்து உள்ளார். இப்பாடலையுகபாரதிஎழுதியுள்ளார்.இது குறித்தஅறிவிப்பைத்தனதுசமூகவலைதளப்பதிவில்தெரிவித்த இமான், அணையா விளக்கு பாடலைகேட்க ஆவலாக இருக்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.