Skip to main content

ஆபாசமான பேச்சு; பயில்வான் மீது பிரபல பாடகி போலீஸில் புகார்!

Published on 11/06/2022 | Edited on 11/06/2022

 

singer Suchisinger Suchitra police complaints against bayilvan ranganathantra police complaints against bayilvan ranganathan

 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர், தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையையும் பற்றி யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு பல நேரங்களில் எல்லை மீறிப் போவதாகக் கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர். 

 

சமீபத்தில்  தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய  நடிகர் பயில்வான் ரங்கநாதன், பாடகி சுசித்ரா குறித்து பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா, பயில்வான் ரங்கநாதனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீங்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு எல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனக் கடுமையாகச் சாடியுள்ளார். இது தொடர்பான ஆடியோ வெளியாகி இணையத்தில் பரபரப்பைக் கிளப்பியது.

 

இந்நிலையில், நடிகர் பயில்வான் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார் பாடகி சுசித்ரா. அதில், “நடிகர் பயில்வான் ரங்கநாதன் சினிமா நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பி வருகிறார். அந்த வகையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளேன். எனவே ஆதாரமில்லாமல் பொய்களைப் பரப்பும் பயில்வானை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.   

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்த கேள்விய என்கிட்ட கேக்காதீங்க - பயில்வானால் கடுப்பான துல்கர் சல்மான்

Published on 27/07/2022 | Edited on 27/07/2022

 

Dulquer salmaan upset bayilvan ranganathan question

 

ஹனு ராகவபுடி இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதா ராமம். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க, ராஷ்மிகா மந்தனா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், தருண் பாஸ்கர், பூமிகா சாவ்லா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஸ்வப்னா சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 5 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளது.

 

இதனையொட்டி அண்மையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் துல்கர் சல்மான் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன், "படத்துல உங்க பேரு ராம்ன்னு சொன்னிங்க, ஆனால் படத்திற்கு ராமம் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது அப்படி என்றால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு துல்கர் சல்மான், "கதைக்கு ஏற்றவாறு இருந்ததால் அப்படி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.

 

ad

 

இருப்பினும் தொடர்ந்து கேள்வி எழுப்பிய பயில்வான்,  அது ஒரே குழப்பமா இருக்கும், சீதா ராமனா? சீதா ராமம்மா?, இல்ல சீதா நாமம்மா?. அதனால எனக்கு ராமம் என்றால் என்ன அரத்தம்ன்னு தெரிஞ்சாகணும். ஒரு வேலை அது தெரியாமல் தான் இந்த படத்தில் நடித்தீர்களா" என்றார். இதனால் அப்செட்டான துல்கர், "நான் இதை எழுதவும் இல்ல, இந்த பெயரை நான் வைக்கவும் இல்ல. இதை சொல்றதுக்கு படத்தின் இயக்குநரும் கூட இல்ல. நான் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டப்போது இந்த படத்திற்கு பெயரே வைக்கவில்லை. சீதா ராமம் என்ற பெயர் ஒரே மாதத்திற்கு முன்புதான் வைத்தார்கள்" எனப் பதிலளித்தார்.  

 

 

Next Story

"ரொம்ப எல்லை மீறி போறீங்க..." - பயில்வானை கிழித்து தொங்கவிட்ட பிரபல பாடகி!

Published on 06/06/2022 | Edited on 06/06/2022

 

Sujithra warned bayilvan ranganathan

 

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக அறியப்பட்டவர் பயில்வான் ரங்கநாதன். ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சினிமா துறையில் நடக்கும் விஷயங்களையும், நடிகர், நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை யூடியூப் தளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகர்கள் பற்றிய இவரின் பேச்சு எல்லையை மீறி போவதாக கூறி பலரும் புகார் கூறி வருகின்றனர். இதையடுத்து பயில்வான் ரங்கநாதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் நடிகர் பயில்வான் ரங்கநாதன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர், பாடகி சுசித்ரா குறித்து தவறாக பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பாடகி சுசித்ரா பயில்வான் ரங்கநாதனை போனில் தொடர்பு கொண்டு கடுமையாக சாடியுள்ளார். அதில், "உங்களுடைய லேட்டஸ்ட் வீடியோ பார்த்தேன். அதில் என்னை பைத்தியம், போதைக்கு அடிமை, யார் எது கேட்டாலும் பண்ணுவேன்னு சொல்லியிருக்கீங்களே? இதற்கு உங்ககிட்டே எதாவது ஆதாரம் இருக்கா?  உங்க வீட்டு பெண்களை பற்றி இப்படி பேசினா சும்மா இருப்பீங்களா? பல பேர்கிட்ட பணம் வாங்கிக்கொண்டு இப்படி பேசுறீங்க. யார்கிட்ட பணம் வாங்குறீங்களோ அவங்களோட லவுட் ஸ்பீக்கரா நீங்க ஆகுறீங்க. உங்களுக்கு நான் என்ன பண்ணேன். ஒரு பொண்ண இப்படி ஆபாசமாகவும், அசிங்கமாகவும் வாய் கூசாம ரொம்ப எல்லையை மீறி பேசுறீங்க" என்று கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பான ஆடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.