Skip to main content

"உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம்" - விபத்து குறித்து விளக்கமளித்த பாடகி ரக்‌ஷிதா

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

singer rakshita accident

 

தொலைக்காட்சியில் ஒரு பாட்டு நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் பாடகி ரக்‌ஷிதா. பின்பு திரைப்படங்களிலும் பாட ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஆல்பம் பாடலை பாடியுள்ளார்.  ஏ.ஆர். ரஹ்மான் இசையில் இவர் பாடிய 'காலத்துக்கும் நீ வேணும்' (வெந்து தணிந்தது காடு), சொல் (பொன்னியின் செல்வன் 1) உள்ளிட்ட பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

 

திரைப்படங்கள், ஆல்பம் என இதைத் தவிர பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். அந்த வகையில் மலேசியாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது தனக்கு விபத்து நேர்ந்ததாக அவரது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், "ஒரு பெரிய விபத்தை சந்தித்தேன். மலேசியாவில் உள்ள விமான நிலையத்திற்கு திரும்பிச் செல்லும்போது நான் சென்ற கார் டிவைடரில் மோதி சாலையோரத்தில் நொறுங்கியது.

 

அப்போது 10 வினாடிகள் என் முழு வாழ்க்கையும் என் கண் முன்னால் வந்தது. ஏர் பேக்கிற்கு நன்றி. அவை இல்லையென்றால் நிலைமை மோசமாக இருந்திருக்கும். நடந்ததை பற்றி நினைத்தால் இன்னும் உடல் நடுங்குகிறது. ஆனால் நானும், ஓட்டுநரும் மற்றும் முன் இருக்கையில் இருந்த மற்ற சக பயணிகளும் சில காயங்களுடன் பாதுகாப்பாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உயிருடன் இருப்பதே அதிர்ஷ்டம் அதற்காக நன்றியுணர்வோடு இருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கட்டுப்பாட்டை இழந்த லாரி; தப்பிக்குதிக்க முயன்ற ஓட்டுநர் உயிரிழப்பு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
bb

கட்டுப்பாட்டை இழந்த லாரியில் இருந்து குதித்து உயிர் தப்பிக்க முயன்ற லாரி ஓட்டுநர் லாரியின் டயரிலேயே சிக்கி உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் நிகழ்ந்துள்ளது.

நெல்லையில் இருந்து சிவகாசி நோக்கி பழைய பேப்பர்களை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி இனாம்மணியாச்சி பாலம் அருகே சென்று கொண்டிருந்தது. லாரியை தூத்துக்குடி சேர்ந்த இலந்தைகுளம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (60 வயது) என்பவர் லாரியை ஓட்டிக் கொண்டிருந்தார். இரவு வேளையில் திடீரென சாலையின் தடுப்பு மீது மோதிய லாரி கட்டுப்பாட்டை இழந்து  தாறுமாறாக ஓடியது. லாரி கட்டுப்பாட்டை இழந்தவுடன் எகிறி குதித்து தப்பித்துக் கொள்ளலாம் என வெளியே குதித்த ஓட்டுநர் லாரியினுடைய சக்கரத்திலேயே விழுந்து உயிரிழந்தார். உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஓட்டுநர் ராமகிருஷ்ணன் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story

சாலை விபத்து; பரிதாபமாகப் பிரிந்த உயிர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Hotel worker passed away in road accident near Modakurichi

ஈரோடு, என்.ஜி.ஜி.ஓ. காலனியை சேர்ந்தவர் சரவணன் (48). திருமணமாகவில்லை. இவரது பெற்றோர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டனர். கரூர் ரோட்டில், சோலார் அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் சரவணன் வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு சரவணன், தான் வேலை பார்க்கும் ஓட்டலுக்கு சொந்தமான பைக்கை எடுத்துக் கொண்டு, கரூர் ரோட்டில் உள்ள பரிசல் துறை நால்ரோட்டில் இருந்து, கொக்கராயன் பேட்டை நோக்கி சென்றுள்ளார். அப்போது, காவிரி பாலத்துக்கு முன்பாக, எதிரில் வந்த ஸ்கூட்டர் எதிரிபாரதவிதமாக சரவணன் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, அங்கிருந்தவர்கள், சரவணனை மீட்டு, ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சரவணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து, மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்