singer mano sons abscond regards students beat issue

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் குடிபோதையில் சிறார்களைத் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது. சென்னை ஆலப்பாக்கத்தை சேர்ந்த கிருபாகரன் (20) மற்றும் மதுரவாயிலைச் சேர்ந்த நிதிஷ் (16) இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் உள்ள கால் பந்து ட்ரைனிங் அகாடமியில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

நேற்று இரவு பயிற்சி முடிந்து இருவரும் வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல், கிருபாகரன், நிதிஷ் ஆகிய இரண்டு பேரிடமும் தகராறில் ஈடுபட்டு இருவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதில் கிருபாகரனுக்கு தலையிலும் நிதிஷுக்கு பல இடங்களிலும் அடிப்பட்டுள்ளது. இது தொடர்பாக தகவலறிந்த வளசரவாக்கம் காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று சிறுவர்களை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனிடையே தாக்குதல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. மேலும் அந்த சிறுவர்கள் தரப்பில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் தாக்குதல் நடத்திய 5 பேரில் பிரபல பின்னணி பாடகர் மகன்கள் ரஃபீக் மற்றும் சாஹீர் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வளசரவாக்கம் போலீசார் மனோவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது ரஃபீக் மற்றும் சாஹீர் ஆகியோர் வீட்டில் இல்லை என மனோ தரப்பில் சொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்த நிலையில் அவர்கள் இரண்டு பேரும் தலைமைறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இரண்டு பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வளசரவாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.