சிம்ரன் தற்போது துருவ நட்சத்திரம், சப்தம் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். சப்தம் படம் அவரது 50வது படம்என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பர் இறந்துவிட்டதாகத்தெரிவித்து வருத்தமடைந்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம்ப முடியாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. எனது அன்பு நண்பர் எம். காமராஜன் இனி இல்லை. 25 வருடங்களாக எனது வலது கரமாகவும், எனது ஆதரவு தூணாகவும் இருந்தார். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஒருவர். உறுதியான மற்றும் சுயமாக உருவாக்கப்பட்ட மனிதன். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் சாத்தியமில்லை.
உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே பலருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிரம் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத்தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.