Skip to main content

''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது'' - சிம்ரன் வேதனை!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020

 

saag


கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக் கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்குப் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நடிகை சிம்ரன் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்...
 


''உண்மையிலேயே என் இதயம் நொறுங்கிவிட்டது. இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்த அப்பாவி உயிரினங்கள் மீதான வன்முறையை நிறுத்த வேண்டும். அவர்கள் இந்த உலகில் உள்ள அனைத்து அன்பிற்கும் கவனிப்பிற்கும் தகுதியானவர்கள்!'' என வேதனை தெரிவித்துள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“எனது அன்பு நண்பர் எம். காமராஜன் இனி இல்லை” - கலங்கிய சிம்ரன்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023
simran friend passed away

சிம்ரன் தற்போது துருவ நட்சத்திரம், சப்தம் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். சப்தம் படம் அவரது 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், அவரது நெருங்கிய நண்பர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து வருத்தமடைந்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நம்ப முடியாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்தி. எனது அன்பு நண்பர் எம். காமராஜன் இனி இல்லை. 25 வருடங்களாக எனது வலது கரமாகவும், எனது ஆதரவு தூணாகவும் இருந்தார். எப்பொழுதும் சிரித்துக்கொண்டே இருக்கும் ஒருவர். உறுதியான மற்றும் சுயமாக உருவாக்கப்பட்ட மனிதன். நீங்கள் இல்லாமல் எனது சினிமா பயணம் சாத்தியமில்லை.

உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே பலருக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீக்கிரம் சென்றுவிட்டார். அவரது குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவர் நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ஒன்ஸ் மோர்' - விஜய்க்கு ஜோடியாகும் சிம்ரன்

Published on 01/09/2023 | Edited on 01/09/2023

 

simran in vijay 68th movie

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இசை வெளியீட்டு விழா செப்டம்பரில் நடக்கவுள்ளதாக முன்பு லோகேஷ் கனகராஜ் தெரிவித்த நிலையில், விரைவில் அதன் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏ.ஜி.எஸ் தயாரிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் விஜய் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு 'சிஎஸ்கே' என தலைப்பு வைக்கப்பட்டதாகவும், கதாநாயகியாக ஜோதிகாவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் முன்பு தகவல் வெளியானது. அண்மையில் படப்பிடிப்பு செப்டம்பரில் நடக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அக்டோபரில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டது.  

 

இதையடுத்து விஜய் இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் ஒரு விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. சமீபத்தில் நடிகை அபர்ணா தாஸ் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் ஜெய்க்கு ஜோடியாக அவர் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த சூழலில் விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றுள்ளது படக்குழு. அங்கு விஎஃபக்ஸ் ஸ்கென் மூலம் விஜய்க்கு டெஸ்ட் லுக் எடுக்கப்பட்டது. 

 

இந்நிலையில் சிம்ரனை இப்படத்தில் நடிக்கவைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிகாவிடம் பேசிய அதே கதாபாத்திரதில் சிம்ரனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக 'ஒன்ஸ்மோர்', 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பிரியமானவளே', 'உதயா' உள்ளிட்ட படங்களில் விஜய்யுடன் ஜோடியாக நடித்துள்ளார் சிம்ரன் என்பது குறிப்பிடத்தக்கது.