simbu vels film case update

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை.

Advertisment

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Advertisment

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை இன்றுடன் (செப்டம்பர் 19) செலுத்தவில்லை என்றால் மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டு இன்று வழக்கு விசாரணையை ஒத்திவைத்திருந்தது நீதிமன்றம்.

இந்த வழக்கானது இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிம்பு சார்பில் ஆஜரான அவரது வழக்கறிஞர், 2021 ஆம் ஆண்டு ஜூலை 16 ஆம் தேதி கையெழுத்தான ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது. மேலும் ஒப்பந்தத்தின் படிகையெழுத்தான நாளிலிருந்து ஓராண்டிற்குள் படப்பிடிப்பை எடுத்து முடிக்காவிட்டால் ரூ. 1 கோடி முன்பணத்தை செலுத்த தேவை இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. என் மீது தவறு இல்லாததால் பணத்தை திருப்பி செலுத்த தேவை இல்லை என்றார். பின்பு சிம்புவின் பதில் மனுவிற்கு வேல்ஸ் நிறுவனம் சார்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அடுத்த மாதம் 6 ஆம் தேதி வரை அவர்களுக்கு நீதிபதி அவகாசம் வழங்கினார். அன்று ரூ.1 கோடிக்கான உத்தரவாதத்தை சிம்பு தாக்கல் செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.