Skip to main content

சிம்புவுக்கும் யுவனுக்கும் ஒரு ராசியிருக்கு! 

Published on 17/01/2020 | Edited on 17/01/2020

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்ட 'மாநாடு' படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். முதலில் உற்சாகமாக அறிவிக்கப்பட்ட 'மாநாடு', பிறகு தடைபட்டு சமாதான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது. நேற்று வெளிவந்த அப்டேட்கள் மகிழ்ச்சியில் திக்குமுக்காட செய்துள்ளன. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள் குறித்தும் படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தும் அப்டேட்களை வெளியிட்டார். அதில் படத்துக்கு இசை யுவன் சங்கர் ராஜா என்ற செய்தியையும் வெளியிட்டிருந்தார்.

 

str with yuvan



'மாநாடு' படத்திற்கு யுவன் இசை என்பது சிம்பு ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் திரையிசை ரசிகர்களையே மகிழ்விக்கும் ஒரு செய்தியாகும். சிம்பு - யுவன் காம்போவின் ட்ராக் ரெக்கார்ட் அப்படி. 'காதல் அழிவதில்லை' படத்தில் அறிமுகமான சிம்புவுக்கு அதன் பிறகு வெளிவந்த 'தம்', 'கோவில்' போன்ற படங்கள் ஓரளவு வெற்றியாக அமைந்தாலும் பெரிய வெற்றியாக அமைந்தது 'மன்மதன்' திரைப்படமே. அந்தப் படத்திற்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா. 'காதல் வளர்த்தேன்', 'தத்தை தத்தை', 'வானமுன்னா' என அந்தப் படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகின. அந்தப் படத்தின் தீம் ம்யூசிக் படத்திற்கு பெரிய பலமாக இருந்தது. அந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப் படங்களில் ஒன்றாக இருந்தது 'மன்மதன்'. அந்த வெற்றி தந்த உற்சாகத்தில் 'வல்லவன்' படத்தை தானே இயக்கினார் சிம்பு. யுவன் இசையமைத்த அந்தப் படத்தின் பாடல்கள் இன்னும் பெரிய வெற்றியை பெற்றன. 'லூசுப்பெண்ணே' பாடல் இளைஞர்களின் மத்தியில் மிகப்பிரபலமான ரிங் டோனானது. 'மன்மதன்' அளவுக்கு 'வல்லவன்' வெற்றி பெறாத போதும் சிம்பு - யுவன் காம்போ ஒரு வெற்றிக் கூட்டணியானது.

 

 

manmadhan



பிறகு வெளிவந்த 'சிலம்பாட்டம்' படத்தின் அனைத்து பாடல்களும் பெரிய ஹிட். படமும் வணிக ரீதியாக வெற்றிப் படமே. 'வானம்' படத்தின் 'எவன்டீ' பாடலும் வைரல் ஹிட்டானது. படமும் ஓரளவு வெற்றி பெற்றது. இப்படி சிம்பு - யுவன் இணைந்த படங்கள் எதுவும் தோற்றதில்லை என்ற ரெகார்ட் அவர்கள் இருவரும் இணைந்தால் ராசி என்று சினிமாவுலகின் நம்பிக்கைப்படி பேசப்பட்டது. இந்த எல்லா நம்பிக்கையையும் உடைத்தது 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம். படுதோல்வியடைந்த அந்தப் படத்தின் பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. 'ரத்தம் ரத்தம்' பாடல் மட்டும் சிம்பு ரசிகர்களை கவர்ந்தது. என்றாலும் இந்தக் கூட்டணியில் வெற்றிதான் அதிகம். அதற்குக் காரணம் இருவரது இசை ரசனை மற்றும் நட்பு. இந்த நண்பர்கள் 'மாநாடு' படத்தில் மீண்டும் இணைகின்றனர். வெங்கட் பிரபு - யுவன் காம்போவும் வெற்றி பெற்ற கூட்டணிதான். இப்போது சிம்பு - வெங்கட் பிரபு - யுவன் இணைந்திருக்கும் 'மாநாடு' படத்தின் பாடல்களை பெரிதும் எதிர்பார்த்திருக்கின்றனர் ரசிகர்கள்.      

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ரொம்ப அப்டேட் கேட்காதீங்க... தவறான டிசிஷன் எடுக்க வாய்ப்பிருக்கு” - சிம்பு பேச்சு

Published on 10/11/2022 | Edited on 10/11/2022

 

 "Don't ask for too many updates...there is a chance of taking a wrong decision" - Simbu speech

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்ற படம் 'வெந்து தணிந்தது காடு'. இப்படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று நடைபெற்றது.

 

இதில் பேசிய நடிகர் சிம்பு, ''ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். படம் பண்ணிக்கிட்டு இருக்கும்போது அப்டேட் கேக்குறீங்க. நிறைய அப்டேட்ஸ் வேணும்... அப்டேட்ஸ் வேணும்னு கேட்குறீங்க. உங்களுடைய ஆர்வம் எனக்கு புரிகிறது. ஆனால், ஒரு விஷயத்தை இங்கே ஷேர் பண்ணிக்க விரும்புகிறேன். டைரக்டராக இருக்கட்டும், ஹீரோவாக இருக்கட்டும் அந்த படத்தை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதற்கு ரொம்ப மெனக்கெட்டு வேலை செய்து கொண்டிருக்கிறோம். நீங்கள் தினமும் ஏதாவது ஒரு அப்டேட் கொடுங்க என்று சொல்லும் போது ஒரு தவறான டிசிஷன் எடுக்கக் கூடிய வாய்ப்பு நிறைய இருக்கிறது. அதனால் என்னுடைய ரசிகர்களுக்கு என்னுடைய ரிக்வெஸ்ட் என்னவென்றால் உங்களை சந்தோசப்படுத்துவது தான் எங்களுடைய முதல் வேலையே.

 

எனவே, எங்களுக்கு அதற்கான களத்தை கொடுத்தீர்கள் என்றால்தான் நல்ல படங்கள் வரும். அதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். எல்லா ரசிகர்களும் ஒரு ஹீரோவை தூக்கி மேல வைப்பாங்க. ஆனால், நான் என்னுடைய ரசிகர்களை தூக்கி மேல வைக்கணும்னு நினைக்கிறேன். என் படத்துக்கு மட்டும் இல்ல. எல்லா படத்துக்கும் ரொம்ப தொந்தரவு பண்ணாதீங்க. உங்களுக்கு நல்ல படம் கொடுப்பதற்கு நாங்கள் எல்லோரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். இது எங்க பத்து தல டைரக்டர் சொல்ல சொன்னாரு. அதனால தான் சொன்னேன்.'' என்றார். 

 

 

Next Story

''முகத்துல தான் வைத்திருப்பேன் தாடி... எதையுமே மறைக்க மாட்டேன் மூடி''-டி.ஆர் பேட்டி

Published on 14/06/2022 | Edited on 14/06/2022

 

TR

 

உடல்நலக்குறைவு காரணமாக உயர் சிகிச்சை பெறுவதற்காக திரைப்பட இயக்குநரும், நடிகருமான டி.ராஜேந்தர் இன்று அமெரிக்கா சென்றார். இதற்கு முன்பே சென்னை உள்ள பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தமிழக முதல்வர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தனர்.

 

இந்நிலையில் வெளிநாடு செல்வதற்கு இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த டி.ஆர்.ராஜேந்தர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், ''நான் உயர் சிகிச்சைக்காக இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன். நான் வாழ்க்கையில எதையுமே மறைச்சதில்லை. நான் முகத்துலதான் வைத்திருப்பேன் தாடி, நான் எதையுமே மறைச்சு வைக்கமாட்டேன் மூடி. இப்போதுதான் அமெரிக்கா போகிறேன். அதற்காக இப்பொழுதுதான் ஏர்போர்ட்டில் வந்து இறங்கியிருக்கிறேன் ஆனால் அதற்குள்ளேயே நான் அமெரிக்கா போயிட்டேன் அங்கே போயிட்டேன் இங்கே போயிட்டேன்னு தப்பும் தவறுமா செய்திகள் வெளியாகிறது. நானே சினிமா கதையாசிரியர். வித விதமா கதை எழுதி வசனம் எழுதி, திரைக்கதை எழுதி யார் யாரோ என்ன என்னவோ பண்ணாங்க... ஆனால் இறைவனைமீறி, விதியை மீறி, கர்மாவை மீறி எதுவும் நடக்காது. நான் ஒரு சின்ன நடிகன், சாதாரண சின்ன கலைஞன், லட்சிய திமுக எனும் சின்ன கட்சியை நடத்துபவன். ஆனா என் மேல பாசம் வைத்து, பரிவு வைத்து பல பேர் செய்த பிரார்த்தனை, ஆராதனை காரணமாகத்தான் இன்று நான் இங்கு நின்னுகிட்டு இருக்கேன். எனது ரசிகர்களுக்கும், எனது மகன் சிம்பு ரசிகர்களுக்கும், திரையுலகை சேர்ந்தவர்களுக்கும், கட்சியை தாண்டி  எனக்காக பிரார்த்தித்த அனைவரும் எனது நன்றி'' என்றார்.