கெளதம்மேனன்இயக்கும் 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ள சிம்பு அடுத்ததாக 'சில்லுனுஒரு காதல்', 'நெடுஞ்சாலை' படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் 'ஏஜிஆர்' என்றகேங்ஸ்டர்கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் கௌதம் கார்த்திக்,கெளதம்மேனன், கலையரசன், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். 'ஸ்டூடியோக்ரீன்'ஞானவேல்ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படம் 2017-ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'முஃப்தி' படத்தின் தமிழ்ரீமேக்ஆகும். இப்படம் டிசம்பர் 14-ஆம் தேதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
'பத்து தல' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அந்த தகவல் உறுதியாகியுள்ளது. இதனை இப்படத்தின் இயக்குநர் கிருஷ்ணா தனது சமூகவலைதள பக்கத்தில்உறுதிபடுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ளட்விட்டர்பதிவில் " பத்து தலபடப்பிடிப்பிற்குதயாராகிவிட்டோம், சிம்பு அப்பா குணமடைந்ததில் மகிழ்ச்சி"எனத்தெரிவித்துசிம்புடன்எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைராகி வருகிறது.
இதனிடையே சிம்பு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தந்தை டி.ராஜேந்தருடன்இருந்தார். அவர் பூரண குணமடைந்ததை முன்னிட்டு அங்கு அவர் ஓய்வு எடுப்பதற்கான அனைத்து பணிகளையும் செய்து கொடுத்துவிட்டு சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார் சிம்பு.