Skip to main content

அடுத்தடுத்து சிம்பு குறித்து அப்டேட்... ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 23/10/2020 | Edited on 23/10/2020

 

silambarasan

 

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடித்து வந்தார். கரோனாவால் படத்தின் ஷூட்டிங் முடங்கியிருந்தது. இந்தப் படத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படும் என்பதால், கரோனா அச்சுறுத்தல் முழுவதும் முடிந்தபிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

 

'மாநாடு' படத்தை, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதனிடையே 'மாநாடு' ஷூட்டிங் தொடங்குவதற்குள் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், சிம்பு நடிக்க திட்டமிட்டு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

 

இந்தப் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளது. 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் 5-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கில், இயக்குனர் பாரதிராஜா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது. 

 

கேரளாவில் இருந்து வந்த சிம்பு, 8ஆம் தேதி, படக் குழுவுடன் கலந்துகொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

cnc

 

சில வருடங்களுக்கு முன்பாக சிம்பு, சமூக வலைதளங்களில் இருந்து விலகிய நிலையில், 22ஆம் தேதி காலை சமூக வலைதளங்களில் மீண்டும் இணைந்திருக்கிறார். அவர் உடல் எடையைக் குறைக்க பயிற்சி எடுத்துக்கொண்ட வீடியோக்களை தொகுத்து ஒரு சின்ன பட டீஸர் போல தனது பக்கத்தில் முதல் பதிவாக வெளியிட்டுள்ளார். 

 

இந்நிலையில் சுசீந்திரனுடன் பணிபுரியும் 46 படத்தின் மோஷன் போஸ்டர் 26ஆம் தேதி மதியம் 12:12 மணிக்கு வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'ரூ.1 கோடி...' - சிம்புவுக்கு கெடு விதித்த நீதிமன்றம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

simbu corona kumar issue

 

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில் கோகுல் இயக்கத்தில் 'கொரோனா குமார்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்கப்படவில்லை. 

 

இதையடுத்து வேல்ஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு தொடர்ந்தது. அந்த மனுவில், "கொரோனா குமார் படத்திற்காக சிம்புவுக்கு முன்பணமாக ரூ. 4.50 கோடி கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவில்லை. அதனால் எங்கள் படத்தை முடித்துக் கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் ரூ.1 கோடி ரூபாய் உத்தரவாதமாக சிம்பு செலுத்த வேண்டும். இந்த உத்தரவாதத்தை செப்டம்பர் 19 ஆம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால் மற்ற படங்களில் அவர் நடிக்க தடை விதிக்கப்படும் என உத்தரவிட்டு செப்டம்பர் 19 ஆம் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம். 

 


 

Next Story

''உண்மையிலேயே லைஃப்ல இது வித்தியாசமாக இருக்கு''-சிம்பு பேட்டி!

Published on 18/09/2022 | Edited on 18/09/2022

 

 "It's really different in life" - Simbu interview!

 

சிம்பு - கௌதம் மேனன் கூட்டணியில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இவர்கள் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'வெந்து தணிந்தது காடு'. கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில் இன்று வெந்து தணிந்தது காடு படக்குழுவினரின் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படத்தின் இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிம்பு, ''இந்த படம் எக்ஸ்பிரிமென்டலான படம். ரெகுலராக கமர்சியல் படங்களில் ஹீரோவோட பில்டப், சாங்ஸ் பர்பாமன்ஸ் எதுவுமே இந்த படத்தில் இல்லை. இது டோட்டலா ரொம்பவும் சீரியஸ் படம். தமிழில் இந்த மாதிரி ஒரு படம் ட்ரை பண்ணலாம்'னு கௌதமன் சார் சொன்னாரு. அது எனக்கு ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. இன்று அதனுடைய ரெஸ்பான்ஸ் ரிலீஸ் அப்புறம் பார்க்கும் பொழுது உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை உண்மையிலேயே கொண்டு போய் சேர்த்தது நீங்க தான். உங்கள் எல்லாருக்கும் எனது நன்றி. இந்த படம் ஆரம்பிக்கும் போது என்கிட்ட வேல் சார் என்ன சொன்னாரோ படம் முடியிற வரைக்கும் அதே மாதிரி இருந்தாரு. நல்லபடியா படம் ரிலீஸ் ஆச்சு. ஏன் இந்த சந்தோஷம் என்றால் நான் அவ்வளவு வலிய பார்த்து இருக்கேன். நீங்க எல்லாருமே கூட இருந்து பார்த்திருக்கிறீங்க. அவ்வளவு கஷ்டத்தில் இருந்து, சினிமாவில் ஹீரோ டோட்டலா காலி ஆகி தெருவுக்கே வந்துருவாரு, அதுக்கப்புறம் ஒரு காயினை தூக்கிப் போட்டு அப்புறம் மெதுவா மேல வர மாதிரி, உண்மையிலேயே லைஃப்ல நடப்பது ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது''என்றார்.