Advertisment

மாநாடுக்கு கிளம்பிய சிம்பு - ரசிகர்கள் உற்சாகம்!

SIMBU

Advertisment

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் சிம்பு, 'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், 'மாநாடு' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். பல தடைகளுக்குப் பின் ஷூட்டிங் தொடங்கப்பட்ட நிலையில், கரோனா அச்சுறுத்தலால் மீண்டும் ஷூட்டிங் தடைப்பட்டது. தற்போது தமிழக அரசு சினிமா ஷூட்டிங்கிற்கு அனுமதி வழங்கியதை அடுத்து, நவம்பர் மாதத் தொடக்கத்தில், 'மாநாடு' படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று தயாரிப்பாளர் அறிவித்தார்.

இதனிடையே இருக்கும் ஒரு மாத இடைவேளையில், சூசீந்திரன் இயக்கத்தில்சிம்பு நடிக்க திட்டமிட்டு, திண்டுக்கல்லில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.'ஈஸ்வரன்' என பெயரிடப்பட்டிருக்கும் அப்படத்தின்படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து, நவம்பர் 9 ஆம் தேதி முதல், மீண்டும் தொடங்கும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் சிம்பு கலந்து கொள்ளவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் 'மாநாடு' படத்தின்படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கும் எனவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 'ஈஸ்வரன்' படத்தில் நடித்து முடித்த கையோடு, சிம்பு அடுத்த படத்தில் நடிக்க செல்வது, அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

suresh kamatchi Simbu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe