Advertisment

மீண்டும் களமிறங்கும் சிம்பு! 

simbu

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தில் சிம்பு நடித்து வந்தார். கரோனாவால் படத்தின் ஷூட்டிங் முடங்கியிருந்தது. இந்தப் படத்திற்கு அதிக ஆட்கள் தேவைப்படுவார்கள் என்பதால், கரோனா அச்சுறுத்தல் முழுவதும் முடிந்தபிறகு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்படும் என்று சொல்லப்பட்டது.

Advertisment

'மாநாடு' படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறார். இதனிடையே 'மாநாடு' ஷூட்டிங் தொடங்குவதற்குள் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், சிம்பு நடிக்க திட்டமிட்டு ஷூட்டிங்கை தொடங்கியுள்ளார்.

Advertisment

இந்தப் படப்பிடிப்பு திண்டுக்கல்லில் தொடங்கியுள்ளது. 35 நாட்களில் முழுப் படப்பிடிப்பையும் முடிக்க திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில் 5-ஆம் தேதி பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் ஷூட்டிங்கில் இயக்குனர் பாரதிராஜா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டது.

கேரளாவில் இருக்கும் சிம்பு, 8ஆம் தேதி, படக் குழுவுடன் கலந்துகொண்டு நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தப் படத்தில் ஹீரோயினாக நிதி அகர்வால் நடிக்கின்றார்.

Ad

சில வருடங்களுக்கு முன்பாக சிம்பு, சமூக வலைதளங்களில் இருந்து விலகினார். தற்போது மீண்டும் சமூக வலைதளத்துக்கு வர முடிவு செய்துள்ளார் சிம்பு. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அக்டோபர் 22 -ஆம் தேதி வெளிவரவுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூ-ட்யூப் என அனைத்திலுமே மீண்டும் சிம்பு இணையவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

Simbu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe