Skip to main content

நரை முடி கெட்டப்பில் சிம்பு பிஸி ஷூட்டிங்... மாநாடு ஷூட்டிங் அடுத்த வாரம்?

Published on 17/06/2019 | Edited on 17/06/2019

வெங்கட் பிரபு இயக்கத்தில், சிம்பு நடிக்க இருக்கும்  ‘மாநாடு’ படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்க உள்ளது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார். இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர். நீண்ட இடைவெளிக்கு பின்னர் சிம்பு படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என்று பல அறிவிப்புகள் வந்த வண்ணம் இருந்தன.
 

simbu

 

 

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஷூட்டிங் போகாததால் படம் அவ்வளவுதான் டைட்டில் அறிவிப்போடு கைவிடப்பட்டது என்று செய்திகள் பரவ தொடங்கின. ஆனால், படம் கைவிடப்படவில்லை படத்தின் முன் தயாரிப்பில் இருக்கிறது படக்குழு என்று தயாரிப்பாளர் தெரிவித்திருந்தார். அதை போலவே சிம்புவும் தன்னுடைய உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்தார். தன்னுடைய தம்பியின் திருமணத்திற்காக திரும்பியபோது வெளியான சிம்புவின் புகைப்படத்திற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
 

இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் வரும் ஜூன்-25ஆம் தேதி மலேசியாவில் பாடல் காட்சியுடன் முதல்கட்ட படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. பாடலுடன் சில முக்கியமான காட்சிகளும் இங்கே படமாக்கப்பட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 
 

இந்நிலையில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தில் கௌதம் கார்த்திக்கும், சிம்புவும் கன்னட ரீமேக் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின. அந்த படத்திற்காக தற்போது வெள்ளை நரை முடி கெட்டப்பில் சிம்பு நடித்து வரும் ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பலர் மாநாடு ஷூட்டிங்கை சிம்பு அம்போவென விட்டுவிட்டார் என்று சொல்கின்றனர். ஆனால், சிலர் ஜூன் 25 மாநாடு ஷூட்டிங்கில் சிம்பு கலந்துகொள்வார் என்று சொல்கின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

மீண்டும் முன்னணி நடிகர் படத்தில் மஞ்சு வாரியர்

Published on 21/06/2023 | Edited on 21/06/2023

 

manju warrier joins arya mr x movie

 

ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் மிஸ்டர் எக்ஸ் (Mr.X). இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க விஷ்ணு விஷாலை வைத்து எஃப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இயக்குகிறார். திபு நிபுணன் தாமஸ் என்பவர் இசையமைக்கிறார். 

 

இந்நிலையில் இப்படத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் அசுரன் படத்தில் அறிமுகமான மஞ்சு வாரியர் கடைசியாக துணிவு படத்தில் நடித்திருந்தார். இந்த 2 படங்களை அடுத்து மிஸ்டர் எக்ஸ் படத்தில் கமிட்டாகியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இப்படம் உருவாகும் நிலையில் இன்று பூஜை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தமிழ், மலையாளம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. 

 

கௌதம் கார்த்திக் கடைசியாக 'ஆகஸ்ட் 16 1947' படத்தில் நடித்திருந்தார். ஆர்யா 'காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தில் நடித்திருந்தார். இந்த இரு படங்களும் கலவையான விமர்சனத்தையே பெற்றன.