Skip to main content

“பணமோ, வார்த்தைகளோ இதனை ஈடுசெய்யாது”- சிம்பு சோகம்

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

சென்னை பூந்தமல்லியிலுள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்ற இந்தியன் 2 பட ஷூட்டிங்கில் எதிர்பாராத விதமாக இண்டஸ்டிரியல் கிரேன் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குனர் ஸ்ரீகிருஷ்ணா, புரொடக்‌ஷன் அசிஸ்டண்ட் மது, ஆர்ட் அசிஸ்டண்ட் சந்திரன் என்ற மூன்று பலியாகினர். மேலும் ஒன்பது பேர் படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஷூட்டிங்கின் இடைவேளையின்போது இந்த விபத்து நிகழ்ந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
 

aas

 

 

இந்நிலையில் கிரேன் ஆப்பரேட்டர் மீது மூன்று வழக்கு பதியப்பட்டு, போலீஸார் கைது செய்துள்ளனர். இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா மீது போலீஸார் நான்கு வழக்குகள் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நடிகர் கமலுக்கும், ஷங்கருக்கும் நசரத்துப்பேட்டை காவல் நிலையம் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளது. 

இந்நிலையில் மாநாடு பட ஷூட்டிங்கில் நடிக்க தொடங்கிய சிம்பு இந்த விபத்து குறித்து சோகமான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “எமது சினிமா தொழிலாளர்களும், தொழில் நுட்பக் கலைஞர்களும் குறிப்பா சண்டைக் காட்சி நடிகர்களும் மயிரிழையில் உயிர்தப்பியே தினம் வீடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். 

ஒவ்வொரு தொழிலாளர்களையும் நான் எங்களை ஏற்றி வைக்கும் ஏணியாகப் பார்க்கிறேன். அவர்களின் வியர்வையில்தான் எங்கள் உயரம் தீர்மானிக்கப் படுகிறது. 

அவர்கள் ஒவ்வொருவரையும் என் குடும்பமாகவே பார்க்கிறேன். இந்தியன் -2 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்தை என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. 

எத்தனை கனவுகளோடு விபத்தில் சிக்கியவர்களின் சினிமா பயணம் ஆரம்பித்திருக்கும்? அவர்களின் குடும்பத்தின் கனவுகளும் சேர்ந்தே தொலைந்து போய்விட்டதே என்பதை நினைக்க நினைக்க கண்களில் நீர் முட்டிக் கொண்டு வருகிறது. 

இறந்துபோன தொழிலாளர்கள், உதவி இயக்குநர்களின் குடும்பத்திற்கு என் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஈடுசெய்ய முடியாத இந்த இழப்பைத் தாங்கும் பலத்தை இறைவன் தர வேண்டிக் கொள்கிறேன். 

இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையட்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் நலமுடன் வீடு திரும்ப அந்த ஆண்டவன் துணை நிற்கட்டும். 

இனியொரு போதும் இப்படியொரு இழப்பு வேண்டாம். தொழிலாளர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்குமான பாதுகாப்பை இன்னும் கவனமாக கையாள வேண்டும் என்பதை அமைப்புகள் உறுதிசெய்ய வேண்டும். 

பணமோ, வார்த்தைகளோ உயிரிழப்பை ஈடுசெய்துவிட முடியாது. அதனால் பணியின் போது ஒவ்வொருவரும் தங்கள் உயிரின் மீது கவனம் வைத்து பாதுகாப்பை உறுதிசெய்துகொண்டு வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தளபதியும் நாயகனும் - 21 வருடங்கள் கழித்து நடந்த சம்பவம்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

rajini and kamal meets in same studio in chennai

 

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. 

 

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. அதே இடத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியும் கமலும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை லைகா நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதே ஸ்டூடியோவில் 21 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தையும் லைகா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர். 

 

முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே இந்தியன் 2 படம், இன்னொரு பாகமாக இந்தியன் 3 என வெளியாகவுள்ளது. அதற்கான படப்பிடிப்புதான் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

 


 

Next Story

"எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன்" - மக்களின் அழைப்பை ஏற்ற இந்தியன் தாத்தா

Published on 03/11/2023 | Edited on 03/11/2023

 

indian 2 An Intro glimpse released

 

கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ. வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். இதில் மணிரத்னம் பட பூஜை சமீபத்தில் போடப்பட்டது. அந்தப் படத்தின் டைட்டில் டீசர் கமலின் பிறந்தநாளான நவம்பர் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆனால் மகேஷ் நாராயணன் படம் பற்றிய எந்தத் தகவலும் இதுவரை வெளியாகவில்லை. 

 

இந்தியன் - 2 படப்பிடிப்பு நீண்ட காலமாக நடந்து வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் நடப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் டப்பிங் பணிகளை தொடங்கினார் கமல்.

 

இதனிடையே இந்தியன் 2 படம், இன்னொரு பாகமாக இந்தியன் 3 என வெளியாகவுள்ளதாக ஒரு தகவல் உலா வந்துகொண்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் கிளிம்ஸ் தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் தற்போது வெளியாகியுள்ளது. தமிழில் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவின் தொடக்கத்தில், "எங்க தப்பு நடந்தாலும் கண்டிப்பா நா வருவேன். இந்தியனுக்கு சாவே கிடையாது" என கமல் பேசுகிறார். தொடர்ந்து உலகம் முழுவதும் ஊழல் நடப்பது போல் காட்டப்படுகிறது. அதனை தடுக்க நாடு முழுவதும் உள்ள மக்கள் பலரும் இந்தியன் தாத்தா கதாபாத்திரத்தை மீண்டும் வரும்படி அழைக்கின்றனர்.

 

மேலும் கம் பேக் இந்தியன் என்ற ஹாஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாக்குகின்றனர். இறுதியில் மக்களின் அழைப்பை ஏற்று கமல் இந்தியன் தாத்தா கெட்டப்பில் வந்து, "வணக்கம் இந்தியா, இந்தியன் இஸ் பேக்" என பேசுகிறார். இந்த வீடியோ தற்போது படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.