'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள படம் 'செக்கச்சிவந்த வானம்'. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 'மாநாடு' படத்தில் நடிக்கவுள்ளார். சிம்பு நடிப்பில் முதல் அரசியல் படமாக உருவாகும் இப்படத்தில் அவர் வில்லனாக நடிப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கிய 'மங்காத்தா' படத்தில் அஜித் வில்லனாக நடித்தது பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.