"அன்னைக்கு முடியல அதுனாலதான் இன்னைக்கு வந்தேன்" - சிம்புவின் சர்ப்ரைஸ் விசிட் !

silambarasan talk about maanaadu 100days

இயக்குநர்வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு ‘மாநாடு’ படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல பிரச்சனைகளைத் தாண்டி வெளியான இப்படம்,வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப்பெற்று திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் 'மாநாடு' படம் ஓடிக்கொண்டிருக்கும் ரோகினி திரையரங்கிற்கு வருகை புரிந்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அத்துடன் அங்கு ரசிகர்களுடன் படம் பார்த்த சிம்பு அவர்களுடன் செல்ஃபிஎடுத்துக் கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சிம்பு, "'மாநாடு' படம் 100 நாட்களை கடந்து ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது என்னுடைய வெற்றி அல்ல. தமிழ் சினிமாவிற்கும், 'மாநாடு' படக்குழுவினருக்கு கிடைத்த வெற்றி" எனத் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பத்திரிகையாளர் ஒருவர்,"நீங்கள் ரசிகர்களை சந்திப்பதாகஇருந்த நிலையில் அது கடைசி நேரத்தில் முடியாமல் போனது ஏன் எனக்கேட்க, அதனால் தான் இன்னைக்கு வந்தேன் என சிம்பு பதிலளித்தார். இதைக் கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் கரகோஷம் எழுப்பினர்.

actor simbu maanaadu silambarasan
இதையும் படியுங்கள்
Subscribe