சிம்பு, 'மாநாடு' படத்தைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கும், 'வெந்து தணிந்தது காடு' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ்' சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் கதாநாயகிகளாக கயாடு லோகர் மற்றும் சித்தி இட்னானி நடிக்கின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இதனையொட்டி படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிர காட்டி வருகிறது. சமீபத்தில் நடிகர் சிம்பு தனது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பணியை நிறைவு செய்திருந்தார். இந்நிலையில் சிம்புவை தொடர்ந்து நடிகை சித்தி இட்னானியும் தனது கதாபாத்திரத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளார். இது இது தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்த அவர், 'பாவை'யின் டப்பிங் முடிந்துவிட்டது. என்னை நம்பி டப்பிங் பேச வைத்த கெளதம் மேனன் சாருக்கு நன்றி.கனவு நினைவாகிவிட்டது. ஆனால் நான் கெளதம் மேனன் படத்தின் ஹீரோயின் என்பதை என்னும் என்னால் நம்பமுடியவில்லை"எனக் குறிப்பிட்டுள்ளார்.