siddharth

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல ரஜினிகாந்த் நேரில் சென்று திரும்பியபோது செய்தியாளர்களிடம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு சமுக விரோதிகளின் ஊடுறுவலே காரணம் என கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் ஒருசேர ஆதரவும், எதிர்ப்புகளும் வந்தன. இந்நிலையில் இந்த பிரச்சனையை குறித்து நடிகர் சித்தார்த் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்... "அடுத்து இத்தனை வருடங்களாக தூத்துக்குடி மாசடைந்ததற்கும் சமூக விரோதிகளே காரணம் என சொல்வார்கள்" என ரஜினியின் கருத்துக்கு எதிராக சித்தார்த் தன் கருத்தை பதிவிட்டுள்ளார்.