sibiraj tweet about sathyraj health issue

இந்தியாவில் குறைந்து வந்த கரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இருப்பினும் நாளுக்குநாள் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதனிடையே திரைபிரபலன்களுக்கு அதிகளவில் கரோனாபாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

Advertisment

அந்தவகையில்நடிகர் சத்யராஜுக்கு சமீபத்தில் கரோனாஉறுதி செய்யப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டதாக அவரது மகன்சிபிராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அப்பா நேற்றிரவு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டார்.தற்போது முழுவதுமாக குணமடைந்து விட்டார். இன்னும் சில நாட்களில் தனது வழக்கமான பணிகளை தொடங்கினார். அனைவரின் அன்புக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment