Advertisment

''இது எனக்காக மட்டுமல்ல மனிதகுலத்துக்காகவும் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி'' - சிபிராஜ்

vfdegsrhdr

கடந்த சில வாரங்களாக இந்தியாவை உலுக்கிவந்த கரோனா இரண்டாம் அலை, தற்போது மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. இருப்பினும், கரோனா மூன்றாம் அலை குறித்து வல்லுநர்கள் எச்சரித்துள்ளதால் அனைத்து மாநில அரசுகளும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளைக் கவனமாக முன்னெடுத்துவருகின்றன. அதன் ஒரு பகுதியாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தடுப்பூசி குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாகப் பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர்.

Advertisment

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை பிரபலங்களும் அரசியல் பிரமுகர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்திவருகின்றனர். அந்த வகையில், நடிகர் சிபிராஜ் கரோனா தடுப்பூசி இரண்டாவது டோசையும் செலுத்திக்கொண்டார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "வேலை முடிந்தது! இன்று எனது 2வது டோஸ் தடுப்பூசியை எடுத்துவிட்டேன். கரோனா தடுப்பூசியை எனக்காக மட்டுமல்ல, நம் நாட்டின் பொறுப்பான குடிமகனாகவும், மனிதகுலத்துக்காகவும் எடுத்துக்கொண்டதில் மகிழ்ச்சி" என கூறியுள்ளார். இவர் தடுப்பூசி செலுத்திக்கொண்டபோது எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisment
coronavirus vaccine sibiraj
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe