ADVERTISEMENT

டிசி நிறுவனத்தின் ஆடியோ நாடகம்; குரல் கொடுத்த ஸ்ருதிஹாசன்

05:48 PM Oct 01, 2022 | kavidhasan@nak…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரபல ஹாலிவுட் நிறுவனமான டிசி நிறுவனம், நாவல்களை நாடகங்களாக ஆடியோ வடிவில் தயாரித்து வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நிறுவனம் தயாரிப்பில் வெளியான 'தி சான்ட்மேன்: ஆக்ட்' உலக அளவில் பலரது கவனத்தை பெற்றது. இப்போது இந்த நாடகத்தின் மூன்றாம் பாகம் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' உருவாகிறது. இந்த தொடரில் ஜேம்ஸ் மெக்அவோய், கேட் இன்னிங்ஸ், மிரியம் மார்க்கோய்ல்ஸ் மற்றும் ஜஸ்டின் விவியன் பாண்ட் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் பிரபல டிசி நிறுவனம் தயாரிக்கும் 'தி சான்ட்மேன்: ஆக்ட் III ' ஆடியோ நாடகத்தில் ஸ்ருதிஹாசன் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், " இசை கலைஞராக தொடரும் என்னுடைய பயணத்தில் 'தி சான்ட்மேன்: ஆக்ட்' போன்ற ஆடியோ வடிவிலான நாடகத்தில் பின்னணி பேச வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அது தற்போது நனவாகி இருக்கிறது. இந்த ஆடியோ நாடகத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் நீல் கியாமனின் மிகப்பெரிய ரசிகை நான். நீல் கியாமன் எழுதிய தி சான்ட்மேன் எனும் ஆடியோ நாடகத் தொடரில் ஒரு சிறிய பகுதியாக என்னுடைய பங்களிப்பை வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது" என்றார்.

இதனிடையே நடிகை ஸ்ருதிஹாசன் தற்போது இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்திலும், நடிகர் பாலமுரளி கிருஷ்ணா நடிப்பில் தயாராகி வரும் 'என் பி கே 107' எனும் படத்திலும், சிரஞ்சீவிக்கு ஜோடியாக 'சிரு 154' எனும் படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT