Skip to main content

"இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை" - நடிகை ஸ்ரேயா

Published on 08/05/2023 | Edited on 08/05/2023

 

shriya speech at Music Shool Press Meet

 

யாமினி பிலிம்ஸ் சார்பில்,  இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா தயாரித்து இயக்க, இசைஞானி இளையராஜாவின் இசையில், உருவாகியுள்ள பன்மொழித் திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. முழுக்க இசையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம் மே 12 அன்று திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர். 


  
அதில் நடிகை ஸ்ரேயா சரண் பேசியதாவது, "சென்னை வருவது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ஷூட்டிங் பற்றி நிறைய இனிமையான தருணங்கள் நினைவுக்கு வருகிறது. இப்படத்திற்கு ஷூட்டிங் செல்வது எனக்கு வீட்டுக்குப் போவது போல் தான் இருந்தது. என் உறவினர்களில் பலர் வீட்டை விட்டு வெளியே வரவே நிறைய போராட வேண்டும். அதனால் இந்தக் கதையைக் கேட்டபோது அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இது கண்டிப்பாக சொல்லப்பட வேண்டிய கதை. இயக்குநர் மிகச் சிறப்பான முறையில் இதைத் திரையில் கொண்டு வந்துள்ளார்" என்றார். 

 

இயக்குநர் பாப்பாராவ் பிய்யாலா பேசியதாவது, "இந்த காலத்தில் மாணவர்கள் எப்போதும் எக்ஸாம் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். அதற்கான அழுத்தத்தில் சிலர் தற்கொலைக்குத் தள்ளப்படுகிறார்கள். என் காலத்தில் இப்படி இருந்ததே இல்லை. நானெல்லாம் படிப்பு முடிந்து விளையாட்டில் தான் அதிகம் ஈடுபட்டுள்ளேன்.  குழந்தைக் காலத்தில் மிகச் சந்தோஷமாகவே இருந்துள்ளேன். இந்தப் படத்தில் சொல்லும் விஷயம் மிகத்தீவிரமானவை. இக்காலத்தில் மாணவர்களுக்கு இருக்கும் அழுத்தம் பற்றிப் பேசும்போது அதை மியூசிக்கலாக பேசலாம் எனத் தோன்றியது" என்றார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

"நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா? இது சட்டப்பூர்வமானதா?" - ஸ்ரேயா கேள்வி

Published on 05/04/2023 | Edited on 05/04/2023

 

Shriya Saran about birds

 

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான ஸ்ரேயா, திருமணத்திற்கு பிறகு இந்தி மட்டும் தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் பான் இந்தியா படமாக வெளியான 'கப்ஸா' படம் மோசமான விமர்சனத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து 'மியூசிக் ஸ்கூல்' என்ற தலைப்பில் ஒரு படம் உருவாகி வருகிறது. 

 

இந்த நிலையில் படங்களில் பிசியாக இருக்கும் ஸ்ரேயா, அண்மையில் மும்பை அருகிலுள்ள அலிபாக் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு சென்றார். அங்கு ஒரு பெரிய கூண்டுக்குள் பறவைகளை அடைத்து வைத்துள்ளதை வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த பதிவில், "நீங்கள் விலங்குகளை நேசிப்பவராக இருந்தால், விலங்குகளை சிறைப் பிடித்து வைக்கக் கூடாது என்பதாக புரிந்து கொள்ளுங்கள். பறவைகள் சுதந்திரமாக பறக்க வேண்டும். ஒரு சிறிய கூண்டில் இத்தனை பறவைகள்? நீங்கள் பொறுப்பாக இருக்க வேண்டாமா? இது சட்டப்பூர்வமானதா? பறவைகள் நாள் முழுவதும் ஒரு சிறிய கூண்டில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றை பார்த்து மக்கள் மகிழ்வார்களா." என அந்த ஓட்டல் நிறுவனத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பியிருந்தார்.

 

மேலும் "அந்த பறவைகள் கூண்டை உடைத்து வெளியே பறக்க முயன்றது. அதை பார்க்கும் போது வருத்தமாக இருக்கிறது" என பதிவிட்டிருந்தார். இந்த பதிவின் கீழ், "அவை அனைத்தும் வெளிநாட்டுப் பறவைகள். இங்கு இருக்கும் சூழலில் விடுவித்தால், உயிர் வாழ முடியாது" என்று பலரும் கமெண்ட் செய்திருந்தார்கள். அந்த கமெண்டிற்கு பதிலளித்த ஸ்ரேயா, “சிறிய கூண்டுக்குள் பறவைகள் இருக்கிறது. அதை அவர்கள் பார்க்கவே விடுவதில்லை" என பதிவிட்டிருந்தார். 

 


 

Next Story

பார்வையற்றவர்களைக் கொண்டு ஸ்பா நடத்தும் ஸ்ரேயா

Published on 20/03/2023 | Edited on 20/03/2023

 

 Shriya Saran Interview

 

உபேந்திரா, சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்துள்ள 'கப்ஜா' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படம் மற்றும் திரையுலகம் குறித்து பல்வேறு சுவாரசியமான அனுபவங்களை நடிகை ஸ்ரேயா பகிர்ந்து கொள்கிறார்.

 

உபேந்திரா சாரோடு நடிப்பது உண்மையிலேயே பெருமையான விஷயம். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் மிகப்பெரியது. ஆனால் அவரைப் பாராட்டினால் அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். நடனத்தின் மீதான ஆர்வம் எனக்கு சிறுவயதிலிருந்தே இருக்கிறது. நடனம் என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான ஒன்று. நடனம் கற்றுக்கொண்டால் நடிப்பு எளிமையாகிவிடும். 

 

இந்தப் படத்தில் ஒரு அன்பான, ஸ்ட்ராங்கான ஒரு பெண்ணாக நான் நடித்திருக்கிறேன். மக்களால் அது நிச்சயம் ரசிக்கப்படும். சிறுவயதில் என் பள்ளிக்கு அருகில் இருந்த பார்வையற்றோருக்கான பள்ளியில் சேவைகள் செய்திருக்கிறேன். அப்போது அந்தக் குழந்தைகளின் அன்பு என்னை ஈர்த்தது. பிற்காலத்தில் நான் ஒரு ஸ்பா தொடங்கியபோது அதில் முழுக்க முழுக்க பார்வையற்றவர்களையே பணியில் அமர்த்தினேன். மற்றவர்களை விட அவர்களால் அதிகம் உணர முடியும் என்பதால் அவர்கள் மசாஜ் செய்வதில் சிறந்து விளங்கினர். அவர்களுடைய அன்பு தான் இன்றும் என்னை இயக்குகிறது.