ADVERTISEMENT

கரோனா அறிகுறியுடன் ஸ்ரேயா கணவர்!! வீட்டிலேயே சிகிச்சை! 

05:10 PM Apr 15, 2020 | santhosh

உலகம் முழுவதும் கரோனா வைரஸால், சுமார் 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.25 லட்சத்தை கடந்துள்ளது. மேலும், 4,91,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். அதேபோல் இந்தியாவிலும் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வரும் நிலையில், கரோனா அறிகுறியுடன் சிகிச்சைக்கு சென்ற ஸ்ரேயாவின் கணவருக்கு ஸ்பெயினில் உள்ள ஒரு மருத்துவமனை சிகிச்சையளிக்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த 2018ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயாவிற்கும், ஆண்ட்ரே கொஸ்சீவுக்கும் திருமணம் நடந்தது. இருவரும் தற்போது ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வரும் நிலையில், தனது கணவருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதை அறிந்த ஸ்ரேயா அவரை அருகிலுள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்குள்ள மருத்துவர்கள் ஆண்ட்ரேவுக்கு கரோனா இல்லையென்றாலும், இங்கு தங்கியிருந்தால் கரோனா தொற்று ஏற்பட்டுவிடும் என்று அறிவுறுத்தியதால் ஸ்ரேயா தனது கணவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது இருவரும் சுயதனிமைப்படுத்தலை கடைபிடித்து, வீட்டிலேயே இருந்து சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதால் ஆண்ட்ரே கொஸ்சீவ் கரோனா அறிகுறிகளில் இருந்து குணமடைந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT