Skip to main content

''நான் இதை எழுதுகிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை'' - ஷ்ரேயா கோஷல் உருக்கம்!

Published on 02/06/2020 | Edited on 02/06/2020

 

gsag


பாலிவுட்டில் பிரபலமானவரும், சல்மான் கானின் ஆஸ்தான இசையமைப்பாளருமான வாஜித் கான் காலமானார். 42 வயதான அவர் சிறுநீரக பிரச்சனை காரணமாக மும்பையில் உள்ள செம்பூரின் சூரானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது உடல் நிலை மோசமானது. இதைத் தொடர்ந்து அவர் நேற்று காலமானார். வாஜித் கான் மறைவுக்குத் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பாடகி ஷ்ரேயா கோஷல் மறைந்த வாஜித் கானுக்கு இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்...
 


''இதை நான் எழுதுகிறேன் என்று என்னால் நம்ப முடியவில்லை. இது உண்மையற்றதாக உணர்கிறேன்... வாஜித் பாய், நான் கண்களை மூடிக்கொண்டு உங்களுடைய புன்னகை முகத்தை மட்டுமே பார்க்கிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்கள் எப்போதும் நேர்மறைத்தன்மையை என்னிடம் கண்டீர்கள். உங்களைச் சுற்றியுள்ள அனைவருக்கும் எவ்வளவு அரவணைப்பையும் மகிழ்ச்சியையும் பலத்தையும் கொடுத்தீர்கள்.

நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது நான் தொழில்துறையில் ஒரு புதியவளாக இருந்தேன். ஆனால் நீங்கள் இதைக் குடும்பம் போல் என்னை உணரவைத்தீர்கள். எனவே உங்கள் மனத்தாழ்மை, உணர்திறன், அர்ப்பணிப்பு, மக்களுக்கு நல்லது செய்வதில் அயராத அன்பு, ஒரு சிறந்த திறமையான இசையமைப்பாளர்-பாடகர் என்பதற்கு மேலாகவும் அப்பால் என்னை நீங்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள்.
 

 


நாம் பேசும் ஒவ்வொரு முறையும், நீங்கள் எனக்குப் பதிவு செய்ய விரும்பும் பல அழகான மெல்லிசைகளை உருவாக்கியுள்ளீர்கள் என்று சொன்னீர்கள். நீங்கள் இசையின் தடுத்து நிறுத்த முடியாத சக்தியாக இருந்தீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும், நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். கடவுள் குடும்பத்திற்குப் பலம் அளிக்கட்டும். விடைபெறுவது மிகவும் கடினம். உங்கள் ஆத்மா சாந்தி அடையட்டும் வாஜித் கான்'' எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இளையராஜா இசையில் ஸ்ரேயா நடிக்கும் புது படம்! 

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

shriya saran


தமிழில் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் ஸ்ரேயாசரண். ரஜினியுடன் 'சிவாஜி', விக்ரமுடன் 'கந்தசாமி', விஜய்யுடன் 'அழகிய தமிழ் மகன்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, மலையாளம் படங்களிலும் நடித்துள்ளார். 

 

கடந்த சில வருடமாகவே சினிமாவிலிருந்து ஒதுங்கியுள்ள ஸ்ரேயா, 2018ஆம் ஆண்டு ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

 

திருமணத்துக்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட ஸ்ரேயா, தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கைவசம் விமலின் 'சண்டக்காரி', அரவிந்த்சாமியின் 'நரகாசூரன்' போன்ற படங்கள் உள்ளன. மேலும், ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியானது. 

 

இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஸ்ரேயாவிற்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அவர் நடிக்கும் ‘கமனம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். சுஜன் ராவ் இயக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் தயாராக உள்ளது. 

 


 

Next Story

ஸ்ரேயாவுடன் கூட்டணி அமைக்கும் இசைஞானி இளையராஜா!

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

jvgjghg

 

திருமணத்திற்குப் பிறகு நடிகை ஸ்ரேயாசரண் சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் தனது திரையுலக பயணத்தை தொடங்கிவிட்டார். இயக்குனர் சுஜனா ராவ் இயக்கத்தில் உருவாகும் 'கமனம்' படத்தில் நடிகை ஸ்ரேயா சரண் நாயகியாக நடித்துள்ளார். நிஜவாழ்வின் எதார்த்தங்களும் நிகழ்வுகளும் கொண்ட கதையாக 'கமனம்' படம் உருவாகுகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இப்படம் தயாராகிறது. நடிகை ஸ்ரேயா சரணை தனது படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்த பிரபல இயக்குனர் கிரிஷ் 'கமனம்' படத்தின் முதல்பார்வை போஸ்டரை நடிகை ஸ்ரேயா சரணின் பிறந்த நாளான இன்று வெளியிட்டுள்ளார்.

 

இசைஞானி இளையராஜா இசையமைக்க, பிரபல எழுத்தாளர் சாய் மாதவ் புர்ரா வசனங்களை எழுதியுள்ளார். ஞானசேகர் வி.எஸ் இப்படத்தின் ஒளிப்பதிவை மேற்கொள்வதோடு மட்டுமில்லாமல் ரமேஷ் கருதூரி மற்றும் வெங்கி புஷதபு ஆகியோருடன் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 'கமனம்' படத்தின் முழுபடப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இறுதிக்கட்ட பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடித்துள்ள மற்ற நடிகர்கள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.