Advertisment

''இப்போது முழு தேசமும் அவருக்காக பிரார்த்திக்கிறது" - ஸ்ரேயா கோஷல் நம்பிக்கை! 

fsaf

கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து அவரது உடல் நலம் குறித்த தகவலை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம், அவரின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுவதாக தெரிவித்தது. உடல் நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்தது.

Advertisment

இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திடீரென பாடகர் எஸ்.பி.பி கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இந்நிலையில் பாடகி ஸ்ரேயா கோஷல் எஸ்.பி.பி குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்...

Advertisment

"அவர் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து இடைவிடாது எனது பிரார்த்தனைகள் இருக்கின்றது! அவர் திரும்பி வந்து முற்றிலும் நன்றாக இருப்பார் என்று நான் நம்புகிறேன்! இப்போது முழு தேசமும் அவருக்காக பிரார்த்திக்கிறது. #SPBalasubraniam" என கூறியுள்ளார்.

spb shreya goshal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe